சென்னை, ஜன.2- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட் டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வியாழனன்று ( ஜன.2) ஆர்ப்பாட்டம் நடத்த இருப்ப தாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்தனர். ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்காமல் மறுத்துவிட்டனர். இருப் பினும் போராட்டம் நடக்கும் என பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற் காக காவல்துறை பாதுகாப்பு மட்டும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போடப்பட்டது. தொடர்ந்து, போரா ட்டம் நடந்த நிலையில் அதில் ஈடு பட்ட பாமகவினர் கைது செய்யப் பட்டனர். இதற்கிடையே பாமக போராட் டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி பாமக கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார். அப்போது போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, “போராட்டம் நடத் தும் ஒவ்வொருவரும் உங்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பார்க்க லாம். இப்படி ஒரு சம்பவம் நடந்த தற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகா ரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசா ரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வரு கிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல; வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று வேதனை தெரிவித்தார். மேலும், “பாமக நடத்தும் போராட்டத் திற்கு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட முடியாது” என்று நீதிபதி வேல்முருகன் தெரி வித்தார். முன்னதாக அனுமதியின்றி போராட்டம் நடத்திய சௌமியா உள் ளிட்ட பாமகவினர் கைது செய்யப் பட்டனர்.