tamilnadu

img

களை வளர்த்த விவசாயி சொல்ல மறுக்கும் கதை - மதுரை சொக்கன்

தேனி, திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடப்பது நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்பதை சுத்தமாக மறைத்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மட்டுமே தாக்கி பேசியிருக்கிறார்.  பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டதாக கூறியபோதும், மறந்தும் கூட பிரதமர் மோடியின் ஆட்சி குறித்துப் பேச மறுக்கிறார். பழைய பாசம் கண்ணை மறைக்கிறதா? அல்லது கூட்டணியை விட்டு வெளியே வந்ததை மறந்துவிட்டாரா  என்று தெரியவில்லை.  தன்னை விவசாயி என்று அழைத்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எள்ளுக்கும், கொள்ளுக்கும் வித்தியாசம் தெரியாது என்று இழிவான முறையில் ஏகடியம் பேசுகிறார்.  அவரது ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து கேட்ட போது அந்த செய்தியை தொலைக்காட்சி யைப் பார்த்துத் தான் தெரிந்துகொண்டேன் என்று கூறியவர் தானே இவர். ஆனால், அதிமுகவின் பெயரிலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது; ஆளு நர் ஆர்.என்.ரவி திராவிடக் கொள்கை களை எதிர்த்து பேசியது குறித்து கேட்ட தற்கு ‘திராவிடம்’ குறித்து இலக்கியவாதி களிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்ன ‘இயக்கவாதி’ இவர்.  சேக்கிழார் எழுதிய கம்ப ராமா யணத்தையே கரைத்துக் குடித்தவ ராயிற்றே. எள்ளாக இருந்தாலும் கொள்ளாக இருந்தாலும் பிரித்து அடுக்கி விடுவார். .  மோடி ஆட்சி ‘‘எள் என்று சொன்னால் எண்ணெய்’’ ஆக உழைத்தவர் அல்லவா இவர்!  கூவத்தூரில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடித்தவரல்லவா? எனவே தான் கொள்ளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்.  நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் திருத்தச் சட்டத்தை ஆதரித்த விவ சாயி தான் இவர். இந்த சட்டம் விவசாயி களிடமிருந்து விவசாயத்தைப் பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி விடுகிற கபடத் திட்டம். இந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது மட்டுமல்ல; அதை ஆத ரித்து பாஜகவினர் பிரச்சாரம் செய்யா விட்டாலும் நானே பிரச்சாரம் செய்வேன் என்று சொன்ன விசித்திர விவசாயி அல்லவா இவர்! விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக அந்த சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

அந்த சட்டம் மட்டும் அமலாகியிருந்தால் விவசாயி களுக்கே எள்ளும் கொள்ளும் மறந்து போயிருக்கும்.  திண்டுக்கல் கூட்டத்தில் தேர்தல் பத்திர ஊழல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்தும் விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் பத்திரம் மூலம் ரூ.8200 கோடி அளவிற்கு வாரிச்சுருட்டியது பாஜக. அந்த கட்சி யைப் பற்றி ஒரு வார்த்தை கூட கண்டித்துப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு வாய் இல்லை.  ஆனால் அதை கேள்வி கேட்ட முதல்வர் மீது பாய்கிறார். இதுதான் முனகா மல் முட்டுக் கொடுப்பது என்பது. தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க மறுக்கும் நிலையில் இவர் ஏன் வாயை வாடகைக்கு விடுகிறார் என்று தெரிய வில்லை.  அதிமுக ஆட்சி காலத்தில் கொரோ னா, புயல், வெள்ளம் உள்ளிட்ட அனைத்து பேரிடர்களையும் திறமையாக சமாளித் தோம்; ஆனால், ஒரு புயலைக்கூட திமுக ஆட்சியால் சமாளிக்க முடியவில்லை. நிவாரண நிதி கேட்டு நீதிமன்றத்திற்கு போகிறார்கள். எங்கள் ஆட்சியிலும் கூட ஒன்றிய அரசு நிதி தரவில்லை; ஆனாலும் சமாளித்தோம் என்கிறார் பழனிசாமி.  திமுக ஆட்சிக்கு வந்த போது கொரோ னா உச்சத்தில் இருந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கிய தோடு, மளிகைப் பொருள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்ற வார்டுக்கே சென்று பார்வையிட்டார்.  ஆனால், அதிமுக ஆட்சியில் பாஜகவை பின்பற்றி அந்த நோயை பரப்பி யது தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர் கள் தான் பழி சுமத்தினார்கள். இது குறித்து இன்றைக்கு திண்டுக்கல்லில் அதி முகவின் சின்னத்தில் போட்டியிடும் முக மது முபாரக் நன்றாக அறிவார். ஆனால், இப்போது கமுக்கமாக இருக்கிறார்.   நீதிமன்றத்திற்கு சென்று மாநில உரிமைக்காக வழக்கு தொடுப்பது பெருமை மிக்க ஒன்று.

ஆனால் மாநில உரிமை களை காலில் போட்டு மிதித்த போதெல் லாம் முதுகெலும்பு தேய குனிந்து கும்பிடு போட்டது தான் தவறு.  குடிகெடுக்கும் குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறை வேற்றியதற்கு அதிமுக மற்றும் பாமக அளித்த வாக்குகளே காரணம். அந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். கூட்டணியை விட்டு விலகினாலும் குடி யுரிமை சட்டம் பற்றி பேசமாட்டார் பழனி சாமி. எடப்பாடியார்  பக்கத்தில் நின்று கும்பிடு போட்டுக்கொண்டிருக்கும் முகமது முபாரக்கும் வாய் திறக்க மறுக்கிறார். தன்னுடைய பரப்புரையில் முபாரக்கும் மோடி ஆட்சியைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எடப்பாடி பழனி சாமியை கண்டித்து அப்போது பேட்டி யளித்த முபார்க் ‘‘இச்சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்தது, ஜனநாயக படு கொலை. நரேந்திர மோடியின் கால்களுக்கு செருப்பாக முயற்சி செய்துகொண்டிருக் கிறார்கள். அதிமுகவின் இந்த கேடு கெட்ட நடவடிக்கையை எதிர்த்து நாங்கள்  மிகப்பெரிய போராட்டத்தை நடத்து வோம்’’ என்று கூறியிருந்தார். அந்த போராட்டத்தைத் தான் இப்போது எடப்பாடி பழனிசாமியின் பக்கத்தில் நின்று கொண்டு முகமது முபாரக் நடத்திக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.