tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27,28 புதுக்கோட்டையில் நடக்கிறது

புதுக்கோட்டை, ஜூலை 3- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் புதுக் கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் தொடக்கவுரை யாற்றினர். கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டி பாபு, மாநிலச் செயலாளர் கோபிக்குமார், அங்கன் வாடி ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ்.ரெத்தின மாலா, கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்புமண வாளன், அரசுப் போக்கு வரத்து ஊழியர் சங்க மண் டல பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் உள்ளிட் டோர் பேசினர். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக எம்.சின்னதுரை எம்எல்ஏ, செய லாளராக சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொரு ளாளராக அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொரு ளாளர் எஸ்.தேவமணி உள் ளிட்ட 34 பேர் கொண்ட வர வேற்புக் குழுவும், உப குழுக் களும் அமைக்கப்பட்டன.  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங் கேற்கும் பேரணி-பொதுக் கூட்டத்துடன் 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாடும் நடைபெறும் என வும், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா ளர் கே.ஆர்.சிந்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.  மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி நன்றி கூறினார்.

;