சென்னை, அக்.25- தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடியதில் மாநிலம் முழுவதும் 284 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பட்டாசு வெடி விபத்தில் 525 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் வீடு திரும்பியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவம ைனயில் 11 பேர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். 25 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். எழும்பூர் குழந்தை கள் நல மருத்துவமனையில் 11 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 பேரும் முடிந்தும் திரும்பியுள்ளனர். 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ கம் முழுவதும் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில் 345 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் மா.சுப் பிரமணியன் ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறு கையில், தீபாவளியின்போது பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது”என்றார். ஒவ்வொரு மருத்துவமனைகளி லும் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் பேரிடர் காலம் என்பதால் பாதிப்பு குறைவாக இருந்தது. தீக்காயம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே அரசின்நோக்கம், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது என்றும் அவர் கூறினார். சென்னையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 வயதுக்கும் குறைவான 4 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் திருவண்ணா மலை, பண்ருட்டி போன்ற மாவட்டங் களிலிருந்து வந்தும் சிகிச்சை பெற்றுள்ளனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்றுள்ளது. ஒருவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. அவர் கண்பார்வை பறிபோகும் நிலையில் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.