மயிலாடுதுறை, மே 5- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோத மாக செயல்படும் குவாரிகளை தடைசெய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதி காரிகளிடம் நேரில் முறையிட்டும் நட வடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சி யரின் அலுவலகத்தை முற்றுகை யிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமை வகித்தார். மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், விவசாய சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.சிங்கார வேலன், ஏ.ரவிச்சந்திரன், ஜி.வெண் ணிலா, சி.விஜயகாந்த், இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங் கம், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி. ரவி, நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு, செம்பனார்கோயில் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். தமிழகத்தின் ஏராளமான மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள கொள்ளிடம் ஆற் றில் (மாதிரவேளூர், வடரங்கம்) சட்டவிரோதமாக அமைக்கப்பட் டுள்ள மணல் குவாரிகள் 40 அடி ஆழத்திற்கும் மேல் மணல் வளத்தை இரவு, பகலாக கொள்ளை யடித்து வருகின்றன. இதனால் சுற்றி யுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் உள் ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் சட்ட விரோத குவாரிகளின் விதிமீறல் களை ஆய்வு செய்து அதிகாரிகளி டம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் போதே குவாரியின் ஏஜெண்டாக உள்ள பாமக பிரமுகர் லண்டன் அன்பழ கன் என்பவர் ரவுடிகளுடன் வந்து பொதுமக்களின் மீது கொடூர தாக்கு தல் நடத்தியதில் சிலர் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக குற்றவாளி களை கைது செய்யக்கோரி கொள் ளிடம் மெயின்ரோட்டில் சாலை மறி யல் போராட்டத்தை நடத்திய பிற கும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரையிலும் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்காத நிலையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர் கலந்துகொண்டு நீதிமன்ற சாலையிலிருந்து கண் டன முழக்கங்களை எழுப்பிய வாறு சின்னக்கடைத் தெரு, தரங்கைசாலை வழியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், விவசாயத்தை யும், நிலத்தடி நீரையும் பாது காத்திட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் மாவட்ட மக்களுக்கு குடிநீரை உத்த ரவாதப்படுத்த வேண்டும், மாவட் டம் முழுவதும் பல்வேறு இடங்க ளில் மணல் குவாரிகள் அமைத்து மணல் திருட்டு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண் டும் ஆகிய கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. இனியும் மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுத்து மணல் குவாரியை தடை செய்யவில்லையெனில் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்தி ஆற்றில் இறங்கி போராட்டத்தை நடத்துவோம் என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் எச்சரித்தார்.