சென்னை, மார்ச் 27 - தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறை களுக்கும் ஒரே செயலிகள் உரு வாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கவும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தா ண்டு 5 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது என்றார். தகவல் தொழில்நுட்ப சட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற போதி லும் மாநில அரசு சில வழிகாட்டு நெறிமுறை களை வைத்து அதை ஒழுங்கு படுத்தும் நடவ டிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களை தவறாக பயன்ப டுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓராண்டு காலத்திற்குள் அனைத்து இடங்களிலும் இண்டர்நெட் சேவை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.