இராமநாதபுரம்,மார்ச் 2- இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவார ணம் வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை யும் முழுமையாக கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் மார்ச் 2 வியா ழனன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 100 பெண்கள் உள்பட 500-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.முத்து ராமு, மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகணன், மாவட்ட துணைச் செயலாளர் என்.ராமலட்சுமி ஆகி யோர் பேசினர். நிர்வாகிகள் பி.கல்யாணசுந்தரம், செந்தில் குமார், நவநீதகிருஷ்ணன், தோட்டாமங்கலம் ராசு, ஐ.ஜெய ராஜ், குருசாமி, எஸ்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிக ளுக்கு முழுமையாக பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
வங்கிகளில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிக ளின் காப்பீடு தொடர்பான பதிவு விவரங்களை மாற்றி பதிவு செய்த தால் கடந்த ஐந்தாண்டுகளாக இழப்பீடு வராமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது தொடர் பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நட ராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகி கள் மாவட்ட வருவாய் அலுவலரி டம் நேரில் கோரிக்கை மனு அளித்துப் பேசினர். பேச்சு வார்த்தைக்கு பின்னர் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடரா ஜன் கூறுகையில், கோரிக்கை மனு மற்றும் முற்றுகைப் போராட்டம் தொடர்பான தகவல்கள் மாநில தலைமைச் செயலகத்திற்கு வேளாண் மற்றும் வருவாய் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட வரு வாய் அலுவலர் தெரிவித்தார். மாநில வேளாண் பட்ஜெட் தொடர் பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில நிர்வா கிகள் கலந்துகொண்டு இராமநாத புரம் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறினார்.