சென்னை, மார்ச் 17- “பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இயற்கை சீற்றங்க ளான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர் கொள்ளும் விதத்தில் தரம் மற்றும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித் தார். பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பயிற்சி முகாமை பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் பேசுகையில், “நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு, பொது மக்களின் பயன் பாட்டிற்காக பல கட்டடங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பொதுப்பணித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது”என்றார். பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத் தும் இயற்கை சீற்றங்களான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் தரம் மற்றும் உறுதித் தன்மையுடன் கட்டப்பட்டு வருகி றது. இக்கட்டுமானம் ஏஇசி என் னும் மூன்று அங்கங்களைக் கொண்டது. அதாவது ஏ-ஆர்க்கி டெக்ட்ஸ், இ-இன்ஜினியர்ஸ், சி-காண்ட்ராக்டர்ஸ். இந்த மூன்று அங்கங்களும், ஒன்றுடன் ஒன்று இணைந்து பணிபுரிந்தால், கட்டுமானங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.