சென்னை,பிப்.24- ‘நான் ஏன் எல்லாரையும் வெறுக்கணும்.எல்லோரும் நண்பர்கள்தான். மனிதநேயம் வளரும்’ என்று கூறி இணையத்தில் வைரலான பள்ளி மாணவர் அப்துல் கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி னார். இணையதள தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம், ”எல்லாரும் உலகத்துல சமம். நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சில பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னு தான் கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான். ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம்.
ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி? இந்தக் கருத்து எல்லோர்கிட்டயும் போய் சேரணும். அப்போ தான், மனித நேயம் நிறையாகும். மனித நேயம் இருக்கணும்” என்று மனித நேயத்தையும் அன் பையும் வலியுறுத்திப் பேசி சமூக வலைதளங்க ளில் பாராட்டுக்களை பெற்றார் மாணவர் அப்துல்கலாம். இந்த வீடியோவை பகிர்ந்த, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறுவனை பாராட்டி வந்தனர். சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் மாணவர் அப்துல் கலாமை பிப்ரவரி 24 அன்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரச் செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி னார். அப்போது, அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கினார். அப்போது அந்த சிறுவனிடம், தனது பேச்சையும் செயலை யும் எல்லாக் காலமும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். சிறுவனின் பெற்றோ ருக்கும் தனது பாராட்டை முதலமைச்சர் தெரிவித்தார்.