திண்டுக்கல், மே 6- 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே முதன்மை கடமை என கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாமேதை காரல் மார்க்ஸின் 205 ஆவது பிறந்த தினத்தையொட்டி மே 5 வெள்ளியன்று திண்டுக்கல்லில் செம்படைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:
காவடி தூக்கும் அதிமுக
பாஜகவுடன் சேர்ந்திருக்கிற அதிமுக, முழு மையாக பாஜகவிடம் சரணாகதி அடைந்துள் ளது. இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச தயாரா? ராகுல் காந்தியின் பதவியை பறித்தார்களே, அது தவறு என்று உங்களால் சொல்ல முடிகிறதா? நாடா ளுமன்றத்தை 30 நாட்கள் நடத்தாமல் முடக்கி வைத்தார்களே, உங்களால் எதிர்த்துப் பேச முடிகிறதா? அம்மையார் ஜெயலலிதாவுக்கும் எங்க ளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இருந்தா லும் கூட 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுகிற போது மோடியா, இந்த லேடியா என்று சவால் விட்டவர் தான் ஜெயலலிதா. அப்படிப்பட்ட அம்மாவுடைய வாரிசு என்று சொல்லுகிற இன் றைய அதிமுக தலைவர்கள் மோடிக்கு காவடி தூக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கி றார்கள். மோடியை ஆதரிப்பது தமிழுக்கு செய்கிற துரோகம் இல்லையா? மோடிக்கு வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டுக்கு அவமானம் இல்லையா? 2024 நாடாளுமன்ற தேர்த லில் மோடியோடு கூட்டு வைத்திருக்கிற அதிமுக வுக்கு 40 தொகுதிகளிலும் தோல்வி ஏற் படுமே தவிர உங்களாலே தமிழகத்திலே வெற்றி பெற முடியாது.
கலவரத்தை தூண்டும் திரைப்படம்
‘கேரளா ஸ்டோரி’ என்கிற ஒரு திரைப் படம் தயாரித்திருக்கிறார்கள். கேரளாவைப் பற்றி இல்லாத அபாண்டமான குற்றச் சாட்டுக்களைச் சொல்லி அங்கே 32 ஆயிரம் இந்து பெண்களை கட்டாய மதமாற்றம் செய்து, சித்ரவதை செய்து இஸ்லாமியர்களாக மாற்றியிருக்கிறார்கள் என்று ஒரு கருப்புப் படத்தை தயாரித்து கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவுக் கூட்டம் வெளியிடுகிறது. கேரளா வில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் பாஜகவிற்கு இருந்த ஒரே ஒரு உறுப்பினர் கூட இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. செங்கோட்டையாக இருக்கிற கேரளத்தை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் இந்த திரைப்படத்தை தயாரித்து அங்கே மதக்கலவரத்தை உரு வாக்க முயற்சிக்கிறார்கள்.
ஏக போக முதலாளிகளுக்கு கொண்டாட்டம்
முதலாளிகளுக்கு எவ்வளவு சலுகைகளை வாரிக்கொடுக்கிறது மோடி அரசு. வங்கியில் ஆட்டோ தொழிலாளி கடன் வாங்கியிருக்கி றார், வேன் தொழிலாளி கடன் வாங்கியிருக்கி றார், விவசாயிகள் வங்கியில் கடன் வாங்கி யிருக்கிறார்கள்; யாருடைய கடன்களையாவது மோடி அரசு தள்ளுபடி செய்திருக்கிறதா? ஒரு சல்லிக்காசையாவது தள்ளுபடி செய்திருக்கி றார்களா? ஆனால் இந்த 9 ஆண்டு காலத்திலே அம்பானியும், அதானியும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் வாங்கியிருக்கிற பத்தே முக்கால் லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறீர்களே; பத்தே முக்கால் லட்சம் கோடி என்பது எவ்வளவு பெரிய பணம். அந்த பத்தே முக்கால் லட்சம் கோடி இருந்தால் இந்தி யாவில் வறுமை தாண்டவமாடுமா? இந்த நாட் டில் அந்த பணத்தை வைத்து எவ்வளவு நல்ல திட்டங்களை செய்யலாம். அங்கன்வாடி குழந்தைகளின் காய்கறி செலவுக்கு 20 பைசா உயர்த்திக்கொடுக்க மறுக்கிறார்கள்; ஆனால் அம்பானிக்கும், அதா னிக்கும் பத்தே முக்கால் லட்சம் கோடி தள்ளு படி செய்கிறார்கள் என்று சொன்னால் ஒன்றி யத்தில் ஆளும் பாஜக ஆட்சி யாருடைய ஆட்சி?
பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்
அமைதியாக இருந்த மாநிலம் மணிப்பூர். இப்போது ஆளும் பாஜக ஆட்சியாளர்கள் மலைவாழ் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் சண்டையை உருவாக்கி அந்த மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கலவரத்தைத் தணிக்க முயற்சி செய்யாமல் வெளியே நட மாடினால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுங்கள் என்று பாஜக அரசு உத்தரவிடுகிறது. இத்தகைய சூழல் நிலையில் தான் இந்தியா வில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். வருகிற நாடா ளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்கிற கேள் வியே கிடையாது. யார் ஆட்சிக்கு வரவேண் டும் என்று சொல்வதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது முக்கியமானது. நிச்சயமாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்துகின்ற மகத்தான கட மையை உறுதியோடு ஏற்று செயல்படுவோம். மதவெறி ஆட்சியை வீழ்த்துவது மட்டுமல்ல, நமது தொலை நோக்குப் பார்வை இந்த நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு பொது உடமை சமூகத்தை உருவாக்குவதே! இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். இக்கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, நகரச் செயலாளர் அரபு முகமது, ஒன்றியச் செயலா ளர் சரத்குமார் ஆகியோர் பேசினர்.