அவிநாசி, அக்.16- தேவாலயத்தில் பணிபுரிந்த இந்து மதத்தை சேர்ந்த பெண்ணுக்கு பாதிரி யார்கள் இணைந்து இடத்துடன் வீடும் கட்டிக்கொடுத்த சம்பவம் அவிநாசி யில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, ஆண்டி பாளையம் பகுதியில் மவுண்ட் கார்மல் தேவாலயம் மற்றும் குழந்தைகளுக்கு உதவி புரியும் நோக்கத்துடன் வஞ்சி பாளையம் பகுதியில் மதர் தெரசா பீஸ் ஹோம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் வாணீஸ்வரி என்ற பெண் சமையல் வேலை செய்து வரு கிறார். வாணீஸ்வரி கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். வாணீஸ்வரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தேவாலயத்தில் பல ஆண்டுகளமாக பணியாற்றி வந்த நிலையில், கிறிஸ்தவ பாதிரியார்கள் மூலமாக (பாதர்ஸ் அசோசியேசன்) அவிநாசி ஒன்றி யத்திற்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி, கிரேஸ் கார்டன் பகுதியில் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கொடுத்து, அத்துடன் வீடும் கட்டிக் கொடுத்துள்ளனர்.
இதனுடைய மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் ஆகும். இந்த இல்லம் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி பங்கேற்று இல்லத்தினை திறந்து வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே.குமரவேல் மற் றும் அப்பெண்ணுக்கு இடம், வீடு கட்டுவதற்கு உதவி புரிந்த பாதிரி யார்கள் (பாதர்ஸ் அசோசியேசன்) ராய், ஆண்டனி, ஜான்சன், ஜோ ஜூ, ஜோஸ், ராபர்ட், ரிச்சோ உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்து சாமி கூறுகையில், நாடு முழுவதும் மத வெறி அரசியல் அச்சுறுத்தி வருகிறது. அத்துடன் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் விஷமத்தனமான கருத்துக் களையும் இந்துத்துவா கும்பல் விதைத்து வருகிறது. திருப்பூரில் சில மாதங்களாக பொதுமக்கள் பொரு ளாதாரம் இன்றி சிக்கித் தவித்து வரு கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், கண வனால் கைவிடப்பட்ட இந்து பெண்ணு க்கு, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த வர்கள் இடம் கொடுத்து வீடும் கட்டிக் கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் நமது பண்பாடு. மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது என்றார்.