இந்தியாவின் மக்கள் 141 கோடி. அதில் 35.6 கோடி இளைஞர்கள். இது இந்திய மக்கள் தொகையில் 28 விழுக்காடு ஆகும். இந்தியாவிற்கு அடுத்து தான் சீனா,பாகிஸ்தான்,அமெரிக்கா,இந்தோனேசியா,நைஜீரியா இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். ஒரு ஊரில் இளைஞர்கள் தான் அதிகம். ஆனால் இன்று அந்த இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மது பழக்கத்தால் ஒரு நிமிடத்திற்கு ஆறு பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் போதைக்கு அடிமையாகும் இளை ஞர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்து உள்ளது. 18 விழுக்காடு தற்கொலை முடிவு எடுப்பதாக வும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தி யாவில் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களில் 25 விழுக்காடு தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் போதைப் பொருள் குறித்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இதில் இந்தியாவில் 3.1 கோடி பேர் கஞ்சாவை பயன் படுத்துகின்றனர் என்றும் 2.3 கோடி பேர் ஓபியம், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை பயன் படுத்துகின்றனர் என்றும் 8.5 லட்சத்திற்கும் அதிக மான மாணவர்கள் போதைப் பொருட்களை ஊசியின் மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்ளும்பழக்கம் உடையவர்கள் என்றும் புதுதில்லியில் அமைந்துள்ள போதைப் பொருள் பயன்படுத்துவதற்கான மருத்துவ மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ - மாணவியர்களில் 18 விழுக்காடு பேர் போதைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்றும் அவர்களில் 80 சத வீதம் பேர் மாணவர்கள் என்றும் மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது. போதைப் பொருள்களின் பயன் பாடு அதிகரித்து வரும் உலக நாடுகளின் பட்டிய லில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது வீரம் செறிந்த போராட்டம் நடத்திய இளைஞர்கள் இருந்த மாநிலங்க ளில் இன்று திட்டமிட்டு இளைஞர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காக போதைப்பொருள் பழக்கம் திணிக்கப்படுகிறது. இதில் பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன் வரிசையில் உள்ளன. சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் வியாபாரத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உத்த பஞ்சாப் என்ற திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று அரசியல் சர்ச்சை எழுந்தது
பாஜக ஆளும் மாநிலம் இந்தியாவிற்கு எடுத்துக் காட்டு என்று சொல்லும் சங்பரிவாரங்கள் கொக்க ரிக்கும் மாநிலமாம் குஜராத்தில் அதானியின் துறை முகம் வழியாக சட்ட விரோதமாக நடக்கும் பல்லா யிரம் கோடி ரூபாய் வர்த்தகம் போதைப் பொருட்கள் மூலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே தள்ளாட வைக்கும் முக்கிய மையமாக குஜராத் மந்த்ரா துறைமுகம் உள்ளது. சமீபத்தில் குஜராத் மந்த்ரா துறை முகத்தில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் சிக்கின. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் போதைப் பொருள் பதிவு முறை செய்யப் பட்டது கிடையாது. இப்படி பல அதானி துறைமுகங்க ளில் பொருள்களின் ‘வியாபார நேர்த்தி’ தொடர்கிறது. இப்பொழுது தெரிகிறதா, ஏன் உலக பணக்காரர் பட்டிய லில் 2 ஆவது இடத்தில் அதானி இருக்கிறார்என்று. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இளைஞர்களை அரசியல் சமூக மாற்றத்திற்காக சிந்திக்க விடாமல் தமிழ்நாட்டில் இளைஞர்களை மதுவுக்கும் கஞ்சா வுக்கும் அடிமையாக்கும் நிலை தொடர்கிறது.
உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. தமிழக அரசாங்கம் போதைப் பொருள்களை ஒழிப்ப தற்கு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனினும் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்கும் இடதுசாரி களின் அரசு கேரளத்தில் போதைப் பொருள்களுக்கு எதி ராக தீவிரமாக விழிப்புணர்வு இயக்கத்தை நடத்து கின்றது. தற்பொழுது பள்ளி கல்லூரிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் சேலஞ்ச் என்று விளையாட்டுப் போட்டி களை நடத்துகிறது. போதையை லாபம் பெறும் வழியாக பயன்படுத்தி இளைஞர்களை அணிதிரள விடாமல் செய்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். இதற்கு எதிராக ஒரு வலு வான இளைஞர் அமைப்பை கட்டமைக்க இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் பல களப் பணிகளை ஆற்றி வருகிறது.
கட்டுரையாளர் : மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்