tamilnadu

img

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனு

புதுதில்லியில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக சட்டமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் குழு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதையும் வலியுறுத்தி புதனன்று (ஜூன் 22) கோரிக்கை மனுவினை வழங்கினர். இந்நிகழ்வில், குழுவின் உறுப்பினர்களான தமிழக அரசின் புதுதில்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முனைவர் மு.தம்பித்துரை, வைகோ, ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை, கோ.க.மணி, எஸ்.எஸ். பாலாஜி, நயினார் நாகேந்திரன், தி.இராமச்சந்திரன்,  பி.சண்முகம், எம்.எச்.ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், எம்.ஜெகன்மூர்த்தி, கூடுதல் தலைமைச் செயலர் /தலைமை உள்ளுறை ஆணையர் முனைவர் அதுல்ய மிஸ்ரா,  நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்ப குழு மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் உள்ளனர்.