tamilnadu

தமிழகத்தை அமளிக்காடாக்க காவிகள் முயற்சி: கி.வீரமணி

சென்னை, ஜன.9 தமிழகத்தை அமளிக்காடாக்க காவிகள் முயற்சிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை - வெள்ளலூர்:  தந்தை பெரியார் சிலைக்கு கயவர்கள் செருப்பு மாலை அணிவித்ததை கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரி வித்துள்ளார். அந்த அறிக்கை வருமாறு: கோயம்புத்தூர் - வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு சனிக்கிழமை இரவு (ஜன.8) கயவர்கள் செருப்பு மாலை போட்டுள்ளனர். தந்தை பெரியார் சிலை அவ மதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது.குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள் - தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது  கயவர்களுக்கு மேலும் உற்சா கத்தை அளித்து வருகிறது. கண்டுபிடிக்கப் ்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மன நோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப் ்படும் போக்கு  காவல்துறையின் நடைமுறை யாகவும் ஆகிவிட்டது. முதலமைச்சர் இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு குற்றவாளிகள் - அதன் பின்னணியில் இருப் ்பவர்கள்மீதான நடவடிக்கை - தண்ட னையை  சரியான வகையில் எடுத்து விரைவு ப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்து கிறோம். தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று காவிகள் -  காலி கள் முயற்சிக்கிறார்கள் என்பதையும்அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.