வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் டேனியல் சூறாவளி புயலால் பெய்த கனமழைக்கு இரு முக்கிய அணைகள் உடைந்த நிலையில், வெள்ளநீர் டெர்னா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் புகுந்தது. இதில் டெர்னா நகரத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் டெர்னா நகரத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 300-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை 20ஆயிரத்தைத் தாண்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது.