கொச்சி, மே 25- கேரளத்தின் மதச்சார்பற்ற முற்போக்கான அரசுதான் தேசிய மாற்று என தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் (என்சிபி) தேசிய தலைவர் சரத் பவார் கூறினார். இந்த அரசின் முற்போக் கான செயல்பாடுகளை நாடே உற்று நோக்குகிறது என்றும் தெரிவித்தார். என்சிபி மாநில பிரதிநிதிகள் மாநாட்டை கொச்சியில் தொடங்கி வைத்து பேசிய அவர், கேரள அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்த துடன், முதல்வர் பினராயி விஜய னுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார். நாடு எதிர்கொள்ளும் பாதகமான பிரச்சனைகளை மூடி மறைக்க, ஞானவாபி மசூதி உள்ளிட்ட புதிய விவாதங்களை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எழுப்பி வரு கின்றன. பணவீக்கம் மற்றும் வேலை யில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி, மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்றனர்.
இதற்கு எதிராக மதச்சார்பற்ற சக்தி கள் ஒன்றுபட வேண்டும். அயோத்திக்குப் பிறகு வாரணாசி, தாஜ்மஹால், குதுப்மினார் பிரச்சனை களை சர்ச்சையாக்கி வகுப்புவாத பத ற்றத்தை உருவாக்கி ஆதாயம்பெற ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்த வர லாற்று நினைவுச்சின்னங்கள் நாட்டின் பெருமைகள். 400 ஆண்டுகளாக கேள்விப்படாத ஞானவாபி வழி பாட்டுத் தல பிரச்சனையை பாஜக எழுப்புகிறது. பாஜகவின் வகுப்பு வாத பாசிசத்தை எதிர்த்து தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியை என்சிபி அமைக்கும் என்று பவார் கூறினார். ஏ.சி.சண்முகதாஸ் நகரில் (கலூர் சர்வதேச அரங்கம்) நடைபெற்ற கூட்டத் துக்கு மாநில தலைவர் பி.சி.சாக்கோ தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலாளர்கள் பிரபுல் படேல், டி.பி. பீதாம்பரன், அமைச்சர் ஏ.கே.சசீந்தி ரன், முகமது பைசல் எம்.பி., தாமஸ் கே. தாமஸ் எம்.எல்.ஏ., மாநில பொருளா ளர் பி.ஜே.குஞ்சுமோன் ஆகியோர் பேசினர். மாநில துணைத் தலைவர் லத்திகா சுபாஷ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் டி.பி.அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.