தோழர் கே.முத்தையா எனும் பன்முக பேராளுமை - மதுக்கூர் இராமலிங்கம்
தோழர் கே.முத்தையா மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழ் நாட்டில் உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர். பத்திரிகை ஆசிரியர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், இலக்கிய திற னாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், அமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பேராற்றல் மிகுந்த ஆளுமை. தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர எல் லைக்குட்பட்ட பொன்னாங்கண்ணிக்காடு என்ற ஊரில் பிறந்தவர். அவரது தந்தை கருப்பையா. கிராம முன்சீப்பாக பணியாற்றிய நடுத்தர விவசா யக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1918ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பிறந்த கே.முத்தையா பேராவூரணியில் இருந்த ஒரு கீற்றுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் பேராவூ ரணி ஜில்லா போர்டு ஆரம்பப்பள்ளியில் படித்தார். அதன் பின் பட்டுக்கோட்டை மாவட்ட போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயின்ற காலத்தில் பெரியார் நடத்திய குடியரசு ஏடு அவருக்குள் அரசியல் ஆர்வத்தை கிளர்ந்தெழச் செய்தது. மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் அந்நி யத்துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திலும் கே.முத்தை யா பங்கேற்றார். பள்ளி இறுதி ஆண்டின்போது மார்க்சிய நூல்கள் அவருக்கு அறிமுகமானது.
பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர் மீடியட் வகுப்பில் அவர் சேர்க்கப் பட்டார். அந்த பல்கலைக்கழகத்தில் தோழர் கே.பால தண்டாயுதம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் குழுவில் கே.முத்தையாவும் இணைந்தார். இளம் கம்யூனிஸ்ட் மாணவர்களுக்கு சுப்பிரமணிய சர்மா, இஎம்எஸ், ஏ.கே.கோபாலன், கிருஷ்ண பிள்ளை போன்ற தலைவர்கள் அரசியல் வகுப்பு நடத்தினர். தோழர்கள் ஜீவா, பி.ராமமூர்த்தி போன்ற தலை வர்களின் அரசியல் உரைகள் கே.முத்தையாவை ஈர்த்தன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கம்யூனிஸ்ட் மாணவர் கிளைச் செயலாளராக தோழர் கே.முத்தையா செயல்பட்டார். அதே பல் கலைக்கழகத்தில் பி.ஏ.ஹானர்ஸ் வகுப்பில் சேர்ந்தார். 1939ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழ கத்தில் பி.ஏ.ஹானர்ஸ் படிப்பில் சேர்ந்த தோழர் ஆர்.உமாநாத் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழ கம் மாணவர்களுக்கு ஒரு அரசியல் களமாக இருந்தது. பொதுவான பிரச்சனைகள் மட்டுமின்றி, போர் எதிர்ப்பு இயக்கங்களிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதில் முன்னணியாக செயல்பட்டவர் கே.முத்தையா.
எனக்கு அவர் அன்றைய தினம் தலைவராக விளங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார். போராட்டத்திலும், கம்யூனிஸ்ட் இயக்க பிரச்சா ரத்திலும் தொடர்ச்சியாக ஈடுபட்டதால் தோழர் கே.முத்தையாவை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டது. இறுதியாண்டு இறுதித் தேர்வு எழுதும் நாளில் அவரை கைது செய்ய போலீசார் சூழ்ந்தி ருந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பித்து, பல் கலைக்கழகத்தையும், படிப்பையும் விட்டு வெளி யேறினார். பெரும் கனவோடு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் கல்வியை துறந்தாரேயன்றி மார்க்சியத்தின் மீதும், மக்கள் மீதும் கொண்டிருந்த பற்றை கடைசி வரை துறக்கவில்லை. திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சங் கத்திலும் பின்னர் சென்னையில் தோழர் பி.சுந்த ரய்யாவின் வழிகாட்டுதலில் கட்சியின் தென் னிந்திய மையத்திலும் பின் தமிழ்நாடு மையத் திலும் அவர் செயல்பட்டார். 1942ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், சென்னை யில் கட்சிப் பணியாற்றினார்.
கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராக 1942 முதல் 1946ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு கப்பற்படை எழுச்சியின் போது சென்னையில் நடை பெற்ற ஆதரவு பேரணிக்கு ஏ.எஸ்.கே.அய் யங்கார், ஜீவா, வி.பி.சிந்தன் ஆகியோரோடு தோழர் கே.முத்தையாவும் தலைமை தாங்கினார். 1947 ஆம் ஆண்டு தோழர்கள் இஎம்எஸ், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியன், கே.முத்தையா உட்பட 120 தோழர்கள் பாது காப்புக் கைதிகளாக சிறைவைக்கப்பட்டனர். சிறை யிலிருந்து விடுதலையான பின்பு 1947 ஜூன் மாதம் 22ஆம் தேதி தோழர் யமுனாவை திரு மணம் செய்து கொண்டார். ஒரு பள்ளியில் ஆசி ரியையாக பணியாற்றிய யமுனா பின்னர் ஜன சக்தி அலுவலகத்தில் முழு நேர ஊழியராக பணி யாற்றத் துவங்கினார். 1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் தோழர் கே.முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் செங்கொடி என்ற கையெழுத்து பத்திரிகையை கே.முத்தையா ஆசிரியராக இருந்து நடத்தினார். பின்னர் ஜனசக்தியின் பொறுப்பாசி ரியர், தீக்கதிர் நாளேடு மற்றும் செம்மலர் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் என அவரது இறுதிக்காலம் வரை பத்திரிகையாளராக செயல்பட்டார்.
நூற்றுக்கணக்கான இடதுசாரி பத்திரிகையா ளர்களை உருவாக்கிய மாபெரும் பல்கலைக்கழ கமாக அவர் திகழ்ந்தார். இன்றைக்கு மகத்தான கலை, இலக்கிய, பண்பாட்டு பேரமைப்பாக நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்- கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலை வர்களில் ஒருவரான அவர், அதன் பொதுச் செயலா ளராகவும், தலைவராகவும், மதிப்புறு தலைவராக வும் பல ஆண்டுகள் செயல்பட்டார். தமிழ்நாட்டில் ஏராளமான படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. உலைக்களம், விளைநிலம் என்ற இரு மகத்தான நாவல்கள் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவை.
தமிழில் மிகச் சிறந்த படைப்பு களாக இன்றளவும் இவை விளங்குகின்றன. மார்க்சிய ஒளியில் தமிழ் இலக்கியத்தை எவ் வாறு புரிந்து கொள்வது என்பதற்கு வழிகாட்டியாக இராமாயணம் - உண்மையும் புரட்டும், சிலப்பதி காரம் - உண்மையும் புரட்டும், சங்க இலக்கியம் காட்டும் வர்க்க சமுதாயம், சமுதாய வாழ்வில் குறளின் குரல் உள்ளிட்ட நூல்கள் விளங்கு கின்றன. மாமேதை மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை உள்ளிட்ட நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். அவர் சிறந்த கலைஞரும் கூட. செவ்வானம் உள்ளிட்ட நாடகங்களை எழுதியுள்ளார். பாஞ்சாலி சபதம், சிலப்பதிகாரம் ஆகிய வற்றை கதாகாலட்சேப வடிவில் எழுதி தன்னுடைய புதல்விகள் மல்லிகா, வனிதா மற்றும் மகன் இளங்கோ ஆகியோரை கொண்டு அரங்கேற்றி யுள்ளார். நந்தனார் புரட்சி என்பதும் அவர் தயாரித்த கதாகாலட்சேப நிகழ்ச்சிகளில் ஒன்று. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மாணவப் பருவத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், கும்பகோணத்தில் 1964ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாகாண கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 31 தலைவர்களில் ஒருவர்.
அவர் மறைந்தபோது அவரால் உருவாக் கப்பட்ட தோழர் அருணன் சொன்னார்: ‘மதுரை புறவழிச்சாலையில் உள்ள தீக்கதிர் அலுவலக மாடியில்தான் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை தோழர் கே.முத்தையா கழித்தார். கீழே தீக்கதிர் ஏடு ஓடுகிற அச்சு இயந்திரத்தின் ஓசை சீராக கேட்டால்தான் அவருக்கு தூக்கம் வரும். ஒரு வேளை இயந்திரம் நின்று விட்டால் திடுக்கிட்டு எழுந்து கீழே வந்து விசாரிப்பார்’. தீக்கதிர் இயந்திரத்தோடு அவருடைய இதய மும் இணைக்கப்பட்டிருந்தது. இயக்கப் பணிக்காக அவர் குடும்பம் சென்னையில் இருக்க கே.முத்தையா மதுரையில் ஒரு துறவியைப் போல தவ வாழ்க்கை மேற்கொண்டார். இன்றைக்கு மதுரையில் மூன்றாவது முறையாக நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு அவர் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் உருவாக்கிய இயக்கத்திற்கு புதிய வெளிச்சம் தரும்.