மானாமதுரை, டிச.22- மானாமதுரையில் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்கிற தேசிய நெடுஞ்சாலை யில் ரயில்வே பாதைக்கு மேல் அமைக்கப்பட் டுள்ள மேம்பாலம் மீண்டும் சேதமடைந்துள்ளது. இந்த பாலம் ஏற்கெனவே 2019 மார்ச் 26 ஆம் தேதியன்று சேதமடைந்து,பின்னர் சீர மைத்தனர். இந்த பணி நடந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய புலனாய்வு துறைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை அதி காரிகளுக்கும் புகார் செய்யப்பட்டது. உரிய முறையில் பணி செய்யப்படாததால் தற்போது மீண்டும் அதே இடத்தில் மேம்பாலம் சேதமடைந்து,
அதனை சரி செய்கிற பணி நடை பெறுகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் பர மாத்மா ஆகியோர் சேதமுற்ற பாலத்தை நேரில் பார்வையிட்டனர். இதுதொடர்பாக ஒன்றியச் செயலாளர் ஆண்டி கூறுகையில், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இதே இடத்தில் இக்குறைபாடு இருந்ததன் விளைவாக நிர்வா கத்திற்கு புகார் செய்திருக்கிறோம். மீண்டும் 2021 டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி பாலத்தை சீர மைக்கும் பணியைச் செய்தனர் .இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையின் உயரதிகாரி கள் விசாரிக்க வேண்டும் . ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மாவட்ட செயலாளர் வீரபாண்டி கூறும்போது, தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரை, திருப்பு வனம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலங்கள் தரமானதாக வும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஏனென்றால் மானாமதுரையில் ரயில்வே பாதையின் மேற்பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் கடந்த 2019 சேதமடைந்து மேம் படுத்தப்பட்டது .இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரிய அதிகாரி களுக்கு புகார் செய்து இருக்கிறோம். எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. இதற்கு மத்தியில் நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் முத்து உடையார் மற்றும் 2 ஒப்பந்த நிறுவனங்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒப்பந்ததாரரிடமிருந்து 5 சதவீதம் கமி ஷன் வாங்கியதாகவும் அரசுக்கு ஒரு கோடியே 38 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த மேம்பாலம் தரமில்லாமல்கட்டப்பட்டி ருப்பது சரியானதல்ல. உரிய முறையில் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளும் விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தினார்.