tamilnadu

நீடாமங்கலம் இ.கம்யூ., நிர்வாகி நடேச.தமிழார்வன் கொலை வழக்கு

டாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செய லாளர் நடேச.தமிழார்வன் கொலை வழக்கில் முக்கிய  குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ஒளி மதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன் (51). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார்.  இந்நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி நீடாமங்கலம் கூட்டுறவு வங்கி அருகில் தன் காரில் வந்து இறங்கி உள்ளார். அப்போது, அங்கு மூன்று பைக்குகளில் வந்த மர்ம நபர் கள் அவரை அரிவாளால் தலை பகுதியில் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த நடேச.தமிழார்வன் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதையறிந்த அவரது உற வினர்கள், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் எஸ்.பி., விஜயகுமார் விசாரணையை மேற்கொண்டார்.  இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்த நிலையில், தலை மறைவாக இருந்த பூவனூர் ரஜினியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் இந்த கொலை சம்பவத்தின் முக்கிய குற்ற வாளியாக கருதப்படுகிறார். அதனால் பூவனூர் ரஜினியை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.