சென்னை,ஏப்.5- தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 18 ஆம் தொடங்கியது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கையும், அதனைத் தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, 24 ஆம் தேதி வரை விவாதம் நடந்தது. அமைச் சர்கள் பதிலுரைக்கு பிறகு பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது. தற்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறை வேற்ற சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை(ஏப்.6) மீண்டும் கூடுகிறது. நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் படுகிறது. உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு மூத்த அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுகிறார். இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக் கைகள் மீதும் விவாதமும் அமைச்சர் களின் பதிலுரையும் இடம்பெறு கிறது. தினமும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி பதில் இடம்பெறு கிறது. இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தினமும் பேரவைக் கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்பதால் கோட்டை வளாகத்தில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப் பட்டுள்ளது.