tamilnadu

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

விளாத்திகுளம், ஜூன் 9- விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்து வர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை கோவில் பட்டி அரசுமருத்துவமணைக்கு செல்லு மாறும் அலைகழிப்பதாக பொதுமக் கள் குற்றச்சாட்டுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளத்தில் உள்ள அரசு தலைமை மருத் துவமனையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை வெளிப்புற நோயாளி களை பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள் ளது. அப்போது மட்டுமே மருத்துவ மனையில் மருத்துவர் இருக்கிறார். இரவு நேரத்தில் ஒரு மருத்துவர் கூட மருத்துவமனையில் இருப்பது இல்லை, இரவு நேரங்களில் வயிற்று போக்கு, காய்ச்சல், வாந்தி பேதி ஏற்பட்டு விளாத்தி குளம் அரசு மருத்துவமனைக்கு சென் றால் அங்கே மருத்துவர் இருப்பது இல்லை, பெயரளவிற்கு மட்டுமே அங்கு செவிலியர்கள் உள்ளனர். அவர்களோ உங்களுக்கு நோய் தீவிரமாக இருக்கி றது என்றால் கோவில்பட்டிக்கு செல்லுங் கள் என்று நோயாளிகளிடம் கூறி அவர்களை அலைக்கழிப்பு செய்கின்ற னராம். மேலும் ஓர் ஆரம்ப சுகாதார மையத் திலே மகப்பேறுக்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், ஒரு தாலுகாவின் தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு தலைமை மருத்துவர், ஒரு உதவி மருத்துவர்கள் என குறைந்தபட்சம் இரண்டு மருத்துவர்கள் சுழற்சி முறை யில் 24 மணிநேரமும் இருந்திட வேண்டும் என்ற அரசுவிதிமுறை இருக்கும் பட்சத்தில், விளாத்திகுளம் அரசு மருத்துவமனை யில் இரவு நேரம் மருத்துவர்கள் பணி யில் இல்லாமல் இருப்பது ஏன்? என விளாத்திகுளம் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இரவு நேரத்தில் மருத்து வர்கள் இல்லாதிருக்கும் போது, பிர சவ வலியால் மகப்பேறுக்காக பெண் கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் பட்சத்தில் தாய்க்கும், சேய்க்கு மான பாதுகாப்பு உத்தரவு என்ன இருக் கிறது? விளாத்திகுளம் அரசு மருத்துவ மனையில் பகல் நேரங்களில் போதிய அளவிலும், இரவு நேரங்களில் முழு வதும் மருத்துவர்கள் இல்லாது இருக் கும் சூழல் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்படு கிறது. ஆகவே சுழற்சி முறையில் 24 மணிநேரமும் போதிய மருத்து வர்கள் விளாத்திகுளம் அரசு மருத்து வமனையில் இருந்திட வேண்டும் என வலியுறுத்தி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பொது மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது இதனை சரி செய்ய நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளாவிட்டால் பொதுமக்கள் தரப்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .  மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.