tamilnadu

img

தண்ணியை காணோம்...

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை தராமல் கர்  நாடகா முரண்டு பிடித்து வரும் நிலையில் திறக்கப்பட்டதாக கூறப்பட்ட நீரும் மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 13.40  டிஎம்சி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதாக கர்நாடகா அரசு கூறிவரும் நிலையில்  தமிழக - கர்நாடக எல்லை யான பிலிகுண்டுலுவுக்கு 7.05 டிஎம்சியும், மேட்டூர் அணைக்கு 3.75 டிஎம்சி யும் தண்ணீர் வந்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை  அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.  6.34 டிஎம்சி தண்ணீர் மாயமான கதை புரியாமல்  நீர்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ள னர் என்று சொல்லப்படுகிறது. மேட்டூர் அணை யில் இப்போது 20 டிஎம்சிக்கு மட்டுமே தண்ணீர்  இருப்பு உள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 20 நாட்களுக்கு  மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்  ணீர் திறக்க முடியும் என்ற நிலை உருவாகியுள் ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்தால் அல்லது கர்நாடக அணை யில் இருந்து தமிழகத்துக்கான உரிமை நீரை திறந்தால் மட்டுமே குறுவையை மீட்டெடுக்க முடி யும் என்று டெல்டா விவசாயிகள் வேதனைப்படு கின்றனர். குறுவைக்கு இதே நிலை நீடித்தால் சம்பாவும் கேள்விக்குறியாகும்.

ஆரூரான்