tamilnadu

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை சுனாமியால் தீவு அழிந்தது - 3 பேர் பலி

நுலுலஃபா,ஜன.19- பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்த இந்த நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன.  அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.இந்த எரிமலை கடந்த 15 ஆம் தேதி திடீரென வெடித்து சிதறியது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது. சுனாமி அலைகள் டோங்கோ நாட்டின் பல்வேறு தீவுகளுக்குள் புகுந்தன. அவற்றில் சில தீவுகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் புகுந்தன.  குறிப்பாக, எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவு ஆகியவை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளால் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமாகின. ஃப்னொய்புவா தீவில் இரண்டு வீடுகள் தவிர எஞ்சிய வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின.  இந்த எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக டோங்கோ அரசு தெரிவித்துள்ளது.