கால வேக மாற்றத்தில் கைபேசியின் முன் தலை கவிழ்ந்து கிடக்கும் சமூகத்தை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு கடந்த 2 நாட்களும் உணர்வுப்பூர்வமான உலகத்தை எடுத்துக் காட்டின. மனித மனங்களின் ஆழமான உணர்வுகளை தூண்டிவிடும் ஆற்றல் கலைக்கு உள்ளது. அத்தகைய கலையை நிகழ்த்தும் போது ஏற்படுகின்ற பாரிய மாற்றங்களை கண்முன்னே காண முடிந்தது. சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் கே.பி.ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரமாக உருவாக்கப்பட்ட “அம்மா”, வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்தும் “இடம்”, வள்ளலாரின் அன்பை வெளிப்படுத்தும் “மெய்” ஆகிய மூன்று நாடகங்கள் மக்கள் மத்தியில் வீதி நாடகங்களாக அரங்கேற்றப்பட்டன. இந்நாடகங்களை பார்க்கும் போது ஏற்படும் உணர்வுகள், வரலாற்றையும், அதன் உணர்வுகளையும் ஓரு சேர உள்வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளை அளிக்கிறது.
நம் கண் முன்னே கே.பி.ஜானகி அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை சித்திரமாக காட்சிப்படுத்தும் நாடகமாக அம்மா உள்ளது. ஜானகி பாட குருசாமி (கணவர்) ஆர்மோனியம் வாசிக்கும் நாடகத்தின் முதல் காட்சி துவங்குகிறது. அது சுதந்திரப் போராட்ட கால வரலாற்றுச் சூழலுக்கு கொண்டு செல்கிறது. நாடகத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஜானகி யிடம் (அமலா) தேதி கேட்டு வரும் ஏஜெண்டுகளிடம் (ஆலம் ஷா,மணி சுந்தரம்) நடைபெறும் உரையாடல் சாதிய சமூகத்தின் மனநிலையை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. விஸ்வநாததாஸ் உடன் சேர்ந்து நடிக்க மறுக்கும் கதாநாயகிகளை விமர்சிப்பதோடு நின்று விடவில்லை. தானே, கதாநாயகியாக நடிப்பதற்கு உறுதி கூறி, சாதிய சம்பிரதாயங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் காட்சி கண் முன்னே நிழலாடுகிறது. கொடூர அடக்குமுறை காலகட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திய, காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சியிலும் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தி லும் இணைந்த ஜானகி சந்தித்த அடக்குமுறைகளை நாட கத்தின் அடுத்தடுத்த காட்சிகள் வலுவாகப் பேசுகின்றன. தேச பக்தி பாடகராக, எழுச்சிமிக்க பேச்சாளராக, விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதில் சிறை செல்லும் வீராங்கனையாக திகழ்ந்த தியாக வாழ்வை பறைசாற்றுகிறது. சிறையில் ஆஸ்துமா தாக்கி வாழ் நாள் முழுவதும் இக்கஷ்டத்தை அனுபவித்து வந்ததை சுட்டும் போது நாமும் அத்துயரை அனு பவிக்கும் மனநிலை அடைகிறோம். இத்துடன் பல்வேறு கிராமங்களில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துகின்றார். அரசியல் விடுதலை யை பெற்றுத் தந்தது சுதந்திரம். பொருளாதார, சமூக விடுதலையை அளிக்கவில்லை. அதற்கான போராட்டம் தொடர்ந்தது. அதற்கு ஜானகி அம்மாள் செங்கொடி இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். கிராமப்புற மக்களுக்கான அடிப்படை வாழ்வுக்கு தேவையான நிலம், கூலி, சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்தார். இப்போராட்ட களத்தை வெளிப்படுத்தும் விதமாக அவனியாபுரத்தில் கழிவு நீரை பயன்படுத்தி விவ சாயம் செய்யும் சூவேஜ் பார்ம் (பண்ணை)இருந்தது. அங்கு விவசாயிகள் கத்திரி, கீரை விதைத்து விவசாயம் செய்து வந்தனர்.அதை சில பெரும் புள்ளி கள் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்தனர். அப் பண்ணையில் விவசாயிகள், விவசாய பெண்களும், ஆண்களும் களையெடுக்கும் காட்சியில் வரும், மதுரை வட்டாரத்தில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்... உழைப்பின் மேன்மையும்,மனதின் நிறைவையும் உற்சாகப் பெருக்கையும் ஓரு சேர விதைக்கிறது. அதே சமயம், உழைத்து வாழ்ந்த மக்களை விரட்டி அடிக்க காண்ட்ராக்ட்காரர்கள் அடியாட்களை ஏவி விட்டு குடிசைகளுக்கும் படப்புகளுக்கும் தீ வைத்து அழிக் கின்றனர். இச்செய்தி கேள்விப்பட்டு அங்கு வரும் ஜானகி யிடம் விவசாயிகள் நடத்திய உரையாடல் இந் நாட கத்தின் மையக்கரு எனலாம். விவசாயிகள்: நபர் 1 - இத்தனை வருஷமா இங்கேயே இருந்துட் டோம்மா. இப்போ எங்களை இப்படி துரத்துறாங்களே அம்மா...
நபர் 2 - குடிசையெல்லாம் கொளுத்திட்டாங்க, படப்பெல்லாம் எரிச்சிட்டாங்க, ஆடு மாடெல்லாம் அறுத்துகிட்டு ஓடிப்போச்சு, நிர்க்கதியா நிக்றோம்மா, எல்லாமே அழிஞ்சு போச்சு, இங்கிருந்து போறது தவிர வேற வழியில்ல ஜானகி - நீங்க ஏன் போகணும்? நபர் 5- இப்ப குடிசைய கொளுத்தினாங்க, அடுத்து எங்க ளையும் கொளுத்தமாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ஜானகி - நீங்க எதுக்காகவும் அழக்கூடாது. ஏதாவது எழுதி குடுத்தீங்களா? நபர் - எழுதிக் கொடுக்க மாட்டோம்னு சொன்னதாலதாம்மா இப்படியெல்லாம் செஞ்சாங்க. உசிரு பொழச்சா போதும் நாங்கெல்லாம் இங்கேர்ந்து போயிட றோம். ஜானகி ; நீங்க எதுக்காகப் போக ணும், நீங்க யார் முன்னாடியும் மண்டிவிடக்கூடாது. ஆண்ட வனே சர்வே பண்ணி அளந்து வெச்சிருக்கானா. அவங்க ளுக்கு? உங்க உழைப்பை சிந்தி யிருக்கிங்க.உங்க உழைப்பால தான் இந்த மண்ணுல கத்திரி, கீரை விளையுது.உங்களுக்கு இந்த நிலத்துல விவசாயம் செய்ய உரிமை இருக்கு.நீங்க எதுக்கும் பயப்படா தீங்க. நபர் - எப்பிடி பயப்படாம இருக்கமுடி யும்? புள்ளகுட்டியெல்லாம் இருக்கில்ல..? நாமெல்லாம் ஒண்ணு சேர்ந்தா கோடிக்கால் பூதம் எனும் போர்க்குரல் அதிகார வர்க்கத்தை அடி பணிய வைக்கிறது. ஜானகி அம்மாளின் துணிச்சலான தலைமையின் கீழ் அவனியாபுரம், துவரிமான் போராட்டங்கள் விவ ரிக்கப்படுகின்றன. போராட்டத்தின் விளைவாக விவ சாய சங்கமும் கட்சியும் உருவாக்கப்படுகின்றது. இந்துடன் தொடர்ந்து பாப்பா உமாநாத்தின் நினைவு களில் இருந்து வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போரில் ஈடுபட்ட போது திருச்சி பொன்மலை யில் இருந்தபோது பாலர் அமைப்பு உருவானது. ஜான்சிராணி நாடகம் குழந்தைகளைக் கொண்டு நடத்தி யது. இறுதியாக மாதர் சங்க மாநில மாநாட்டிற்காக ஜானகியம்மாவை சந்தித்தது என வரக்கூடிய செய்தி கள் வாழ்க்கையில் பல சிறப்புகளை பிரதிபலிக்கிறது. ஜானகி அம்மாளுடன் இயக்கத்தில் ஈடுபட்டு இந்த வரலாற்று நாடகத்தை பார்த்த ஆதக்காள்,பொதும்பு ஜீவா, சின்னம்மாள் உள்ளிட்டோர் உள்ளிட்ட பலர், தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவர்கள் “தங்களது ஊருக்கு ஜானகி அம்மாளே மீண்டும் வந்தது போன்ற’ உணர்வை அடைந்ததாகவும், பாடல்கள் அழகாக அமைந்திருந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவனியாபுரம் சூவேஜ் பண்ணை போராட்டம் மன திற்குள் தாக்கத்தையும் தைரியத்தையும் ஒருசேர உரு வாக்கியது என்று நாடகத்தை பார்த்த தாய்மார்கள் கூறினர். வன்னிவேலம்பட்டி பொதுமக்கள், இந்த நாட கத்தை மீண்டும் ஒருமுறை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
ராட்டக் குணமும், அளப்பரிய உறுதியும், அர்ப்ப ணிப்பு மிக்க வாழ்க்கையும் ஆழமான முறையில் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. அனேகமாக தமிழகத்தில் எந்த ஒரு கம்யூ னிஸ்ட் தலைவருக்கும் அவருடைய வாழ்க்கை வர லாறு நாடகமாக உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்பட வில்லை. அந்த வகையில் இந்த நாடகம் மிக முக்கியமான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி இருக்கின்றது. இந்த நாடகம் காட்சி மொழியிலும், எடுத்து ரைப்பிலும், பாடல்கள் மூலமாகவும் உரை யாடல் மூலமாகவும்ஜானகி அம்மாளின் வாழ்க்கையை விவரித்துள்ளது. ஒவ்வொரு பாடலையும் மனது மீண்டும் மீண்டும் அசை போடு கிறது. இடம்... இந்தியாவில் நடைபெறும் வெறுப்பு அரசியலை தோலு ரிக்கும் 15 நிமிட நாடகமாக “ இடம்” அமைந்துள்ளது. தந்திரமிக்க குருவும் அவரின் இரண்டு சிஷ்யர்களும் சேர்ந்து மக்களின் மத உணர்வை லேகியம் ஆக தந்து வளர்த்தெடுகின்றனர். எப்படி வெறுப்பு அரசியலுக்கு துணை செய்கின்றனர் என்பதை அழ காக சித்தரித்துள்ளது. குருவாக அசோக் சிங், சிஷ்யர்களாக ஆலம்ஷா மற்றும் மணி சுந்த ரத்தின் நடிப்பும் அபாரம். இந்த நாடக வசனங்களில் சில... 1. நம் மதமே சிறந்ததென்று உணர்வோம். நம் மதப் பெருமையை பேசுவோம். இல்லாததையும், பொல்லாததையும் பேசுவோம். கொம்பு சீவுவோம். 2. குஜராத் ஒரு பரிசோதனை சாலை. குஜராத் நவ இந்தியாவின் பரிசோதனைச் சாலை... 3. அதிகார கோட்டைக்குப் பாதை அமைப்போம். பிணங்களை அடுக்கி வீதி சமைப்போம். அடையாளம் தேடும் வேள்வி நடத்தி அரியாசனம் ஏறும் வழி வகுப்போம் என தொடர்கிறது இந்த உரையாடல்களுக்கு மத்தியில் வரும் பெண் அவர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார். வேட்டைக்காரனே கபட வேலை உனக்கு இது போதாதா? இன்னும் எவ்வளவு உயிர்கள் வேண்டும்? அந்த கபட வேடதாரி சிரித்துக் கொண்டே சொல்வான். என்னை உறுத்த நீ எம்மாத்திரம். பொய்களின் தொழிற்சாலை நான். புனைவுகளின் கோட்டையில் பிறந்து வளர்ந்தவன் நான் . என்னை ஒன்றும் செய்ய முடியாது. குஜராத் இனப்படுகொலை , நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ்,இளவரசன் அனிதா என பலியிடப்பட்ட அவர்களின் சடலங்களுக்கு முன்பாக பாடப்படும் இந்த பாடல் எத்தனை தான் வலிமிக்கது. தினந்தோறும் இழவு விழுவதாகஉள்ளது வீடு எனும் போது கடந்த 10 ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ் சங்பரி வாரங்களும்- பிஜேபி கூட்டாளிகளும் செய்த கும்பல் படுகொலைகள் எத்தனை எத்தனை என மனதை அதிரச் செய்கிறது. இதனைத் தொடர்ந்து எனக்கு இடம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, இந்த நாட்டில் உணவு பழக்கங்களால் இன, மொழி பன்முகத் தன்மையை உரையாடல் மூலமாக பதில் அளிக்கின்றனர். இந்த பதிலின் நிறைவாக பறையாட்டத்துடன் பார்வையா ளர்களும் ஆட்டத்தில் பங்கேற்று சிறப்பு செய்ய நிறைவு பெறுகிறது.
மெய்...
இந்தியாவின் பெரு மதங்களுக்கு மத்தியில் சன்மார்க்கம் போதித்த ராமலிங்க அடிகளாரை வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடகம் மெய். என் சாண் உடம்புக்கு மெய் என்ற பெயரும் உள்ளது என்பது துவங்கி ராமலிங்க அடிகளுக்கும் அவரது மார்க்கத்தை ஏற்ற தொழுஊரார் மற்றும் குழுவின ருக்கும் நடைபெற்ற உரையாடலாக இந்நாடகம் அமைந்துள்ளது.மதத்தை நிறுவனமாக மாற்றி அதிகார வர்க்கத்திற்கான கேடயம் ஆக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடகம். சமயம் என்பதை பற்றி வரும் உரையாடல் குறிப்பி டத்தக்கது . சமயம் என்பது அன்பு செய்தலே, சமயம் என்பது ஒருவரை வெறுக்கக் கற்றுத் தரக்கூடாது. அப்படி வெறுக்க கற்றுத் தரும் எது ஒன்றும் சமயமே அல்ல.இதில் வள்ளலார் போதிக்கும் பாடலாக அறமாக வரும் சில வரிகள். நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ. குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ... வேலையிட்டு கூலி குறைத்தேனோ... பொது மண்டபத்தை இடித்தேனோ...
இவையெல்லாம் இன்றைய அரசியல் நிலைமை களை கூட நமக்கு நினைவுக்கு கொண்டு வரும். இந்த நாடகத்தில் வரும் உரையாடல்களில் மிக முக்கியமானது தமிழ் மொழி மற்றும் வடமொழி மரபுக்கான விவாத பொருள்.உடலை மெய் என்பது தமிழ் மரபு ஆனால் வடமொழி மரபு. காயமே இது பொய்யடா என்கிறது.உடம்பை வளர்த்தேன் உடல் வளர்த்தேனே என்கிறார் திருமூலர். மெய்யை பொய் என்று சொல்லி வன்முறை, கொலைச் செயல்களுக்கு நியாயப்படுத்து கிறது வடமொழி. எனவேதான் வள்ளலாரின் வார்த்தைகளில் அன்பு செய்தலை அறம் என்கிறோம் அன்பு செய்ய வாருங்கள் என ஒவ்வொரு மனிதருக்கும் விண்ணப்பம் செய்கி றோம் என்கிறார். அன்பு செய்க! அன்பே அறமென மொழிக !! அன்பு மறுத்தவரை அறம் வருத்துமென்க வெறுப்பின் கொற்றம் வீழ தோள்கள் இணைக. கரங்கள் உயர்க! என்ற வள்ளலாராக நடித்த சமண குருவின் அழகான குரலில் வளம் பெற்ற பாடலாக இது மிளிர்கிறது.இது வள்ளலாரின் சன்மார்க்க உணர்வு மட்டுமல்ல.இந்திய மக்கள் அனைவரும் அன்பு செலுத்தும் நன்மார்க்கம் என சிறந்தது விளங்குகிறது. இந்த இரு நாடகங்களும் வெறுப்பையும், அன்பை யும் பொழிவதாக அமைகிறது. இந்த நாடகங்கள் இரண்டையும் ஒரு சேர பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனும் தான் எந்தப் பக்கம் இருக்க வேண்டும் என்ற நல்லதொரு சிந்தனையை உருவாக்கும். இந்த நாடகங்களை எழுதி இயக்கிய தோழர் பிரள யன் மற்றும் சிறப்புற நடித்த சென்னை கலைக்குழு வின் தோழர்கள் அ.மங்கை, கவின்மலர், அசோக் சிங், அமலா மோகன், ஆலம் ஷா, மணி சுந்தரம், சமண ராஜா, பவுசி ஜுவல்,சரண் சந்தோஷ், வெங்கட் கிஷோர், கிருஷ்ணா, பிரேம், திலிப் குமார் என அனைவரும் அன்பிற்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.ஏனெனில் நாடகம் என்பது கூட்டுச் செயல்பாடகும். இந்த நாடகங்களுக்கு உறுதுணையாக தெண்கண் தப்பாட்டக் குழு மிகச் சிறந்த முறையில் பங்காற்றியது. இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த அறிவழகனின் குரல் வளமும் பறையாட்டமும் குறிப்பிடத்தக்கது. இத்து டன் தெண்கண் தப்பாட்டக் குழுவின் தோழர்கள் கபில் தேவ், பூமிநாதன், வீரமணி, முருகானந்தம், சஞ்சய், கோகுல், ஆகாஷ் ஆகியோரின் பங்கு சிறப்பானது.