“காலுக்குச் செருப்பு மில்லை. “கோடிக்கால் பூதமடா.. தொழிலாளி கோபத்தின் ரூபமடா” எனும் கவிதைகள் காலத்தால் அழியாமல் ஜீவாவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் எனின் மிகையன்று. சுதந்திரப் போராட்ட வீரராக, பொதுவுடமைப் போராளியாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் நினைவு நாள் ஜனவரி 18. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய பொதுவுடமைப் போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைத்தண்டனைகளையும் சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்கப் பற்றாளராக, இலக்கியவாதியாக பொதுவுடமை இயக்கத் தலைவராக செயலாற்றியவர்.