tamilnadu

img

தேடல் குழுவை தன்னிச்சையாக அமைத்த ஆளுநர் - மாணவர்கள் போராட்டம்

சென்னை, செப். 8 - பல்கலைக்கழக வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சையாக அறிவித் துள்ள ஆளுநர் ஆர்.என் ரவியின் உருவப் படத்தை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை  பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தெரிவு செய்வதற் கான 3 பேர் கொண்ட தேடல் குழுவிற்கான பரிந்துரையை மாநில அரசு அளித்தது. அதன்மீது ஆளுநர் விளக்கம் கோரினார். அதற்கு மாநில அரசு விளக்கம் அளித்தது. பல்கலைக் கழகங்களின் விதிமுறையின் படி ஆளுநர் தன்னிச்சையாக தேடல் குழுவை அமைக்க முடியாது. இருப்பினும், மாநில அரசின் பரிந்துரை, விளக்கத்தை புறக்கணித்துவிட்டு, வழக்கத்திற்கு மாறாக 4 பேர் கொண்ட குழுவை ஆளுநர் அறிவித்துள்ளார். யுஜிசி பிரதிநிதி என்று பீகாரை சேர்ந்த வலதுசாரி நபரை 4வது உறுப்பினராக நியமித்துள்ளார். இதனை  கண்டித்து வெள்ளியன்று (செப்.8) தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்க ளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மாணவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவப்படத்தை எரித்து முழக்கமிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய க.நிருபன் சக்கரவர்த்தி, “தேடல் குழு வில் 3 பேர்தான் இடம் பெறுவார்கள். இதற்கு  மாறாக, ஆர்எஸ்எஸ் நபர்கள் நியமிப்ப தற்காக 4 பேர் கொண்ட குழுவாக மாற்றி,  அதில் ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்ட வர்களை நியமித்துள்ளார். இந்த தேடல் குழு  யுஜிசி, பல்கலைக்கழகங்களின் சட்டங்கள், விதிமுறைகளுக்கு எதிரானது.  பாரதியார் பல்கலைக்கழக, ஆசிரியர்  கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற் றிற்கு தேடல் குழுவை ஓராண்டுக்கு முன்பே  தமிழ்நாடு அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் தராமல்,  ஆளுநர் தான்தோன்றித் தனமாக தேடல் குழுக்களை அறிவித்துள்ளார். அரசமைப்பு சட்டம், யுஜிசி விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, ஆளுநர் உத்தரவை உடனடியாக திரும்ப  பெற வேண்டும். மாநில அரசின் ஒப்புத லோடுதான் தேடல் குழுவை அமைக்க வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, துணைத் தலைவர் காவியா, இணைச் செயலாளர் ரா.பாரதி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஆனந்த் (தென்சென்னை), வே.அருண் குமார் (மத்தியசென்னை), நித்திஷ் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.