tamilnadu

img

மாணவி நந்தினியின் உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்

சென்னை, மே 9- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினியின் உயர்கல்விக்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரை மே 9  அன்று  முகாம் அலுவலகத்தில், 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பள்ளிக்கல்வித் துறையால் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்  மாணவிகள் 96.38 விழுக்காடு மாணவர்கள் 91.45 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல்  இடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், மாணவி ச. நந்தினி தனது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை  ஆசிரியையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து  உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம்  தமிழ்நாட்டின் அடையாளம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள் ளார். அதில், “கல்விதான் யாரா லும் திருட முடியாத சொத்து” என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். 12 ஆம் வகுப்பு தேர்வில் 600 க்கு 600 பெற்றுச்  சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் “படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்” எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை நேரி லும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கி யுள்ளேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப் பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்! “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என தெரிவித்துள்ளார்.