சென்னை, ஜூன் 26- சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச் சியை அரசு மென்மேலும் ஊக்கு விக்கும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத் தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. பல்வேறு பன் னாட்டு மற்றும் இந்தியாவின் பல பெருந்தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வ தற்கு நம் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த தரத்திலும் மிகப்பெரும் எண்ணிக்கையிலும் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஒரு மிக முக்கிய காரணி யாகும். அனைத்து தரப்பினரையும் உள்ள டக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத் துவதிலும் குறு, சிறு மற்றும் நடுத் தரத் தொழில் நிறுவனங்களின் பங்க ளிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27ஆம் தேதி பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத் தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடுகிறது. இதையொட்டி முதல்வர் விடுத் துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இந்திய அளவில், பாரம்பரியத் துறை களில் தமிழ்நாடு முன்னிலை வகிப்ப துடன்,
வளர்ந்து வரும் துறைகளான பாதுகாப்பு மற்றும் விண்வெளி, மின்சார வாகனம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளிலும் தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதனை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் காணப் பட்ட பொருளாதார மந்த நிலையி னாலும் கோவிட் 19 பெருந்தொற்றி னாலும் நலிவுற்றிருந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்களுக்கு புத்துயிரூட்டும் வகை யில் 2022-23ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இந்த நிறுவனங்கள் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 49 விழுக்காடு அதிக ரிக்கப்பட்டு, ரூ.911.50 கோடி ஒது க்கீடு செய்து பல்வேறு நடவடிக்கை களை இந்த அரசு எடுத்து வரு கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முக்கியத்து வத்தினை நன்கு உணர்ந்த இந்த அரசு, அந்த தொழில் நிறுவ னங்களின் மேம்பாட்டிற்காக அனைத்துஉதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகின்றது. மேலும் தமிழக தொழில் துறையின் தூண்களாக விளங்கும் இத்துறையின் வளர்ச்சியை மேன் மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல் படும் என்பதை இந்த இனிய நன்னா ளில் உறுதிபடத் தெரிவித்துக் கொள் வதோடு குறு, சிறு மற்றும் நடுத்த ரத் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர் மற்றும் தொழிலா ளர்கள் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டு ள்ளார்.