சென்னை, ஜன.27- குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப் படத்தை தமிழக அரசே முன்னின்று திரையிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது பிபிசி செய்தி நிறுவனம் வெளி யிட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு குறுக்கு வழியில் தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் பல் கலைக் கழகங்கள், கல்வி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் திரையிட்டு வருகின்றனர். இந்த ஆவணப் படத்தை சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட பல்கலை. நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனையொட்டி பல் கலைக் கழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. இதனையும் மீறி வெள்ளிக் கிழமை (ஜன.27) பல்கலைக்கழக வளாகத்தில் மடிக்கணினி வாயிலாக மாணவர்கள் திரையிட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி கூறியதாவது: பிபிசி ஆவணப்படம், குஜராத் இனப்படுகொலையை மோடி, அமித்ஷா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டு நடத்தியதை அம்பலப்படுத்துகிறது. ஒன்றிய அரசு படம் பார்ப்பதை அதிகாரப்பூர்வமாக தடை செய்யவில்லை. ஆனால், ஆவ ணப் படத்தை பார்க்கும் மாணவர்களை தடுக்கும் வேலையில் காவல்துறையும், பல்கலைக்கழக நிர்வாகமும் செயல்படு கின்றன. திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்திற்குள் காவல்துறை அத்துமீறி புகுந்து மாணவர்களை திரையிட விடாமல் செய்துள்ளது. ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்க வேண்டிய பல்கலைக் கழக நிர்வாகமும் ஒன்றிய அரசுக்கு துணை போகிறது. எத்தகைய தடைவந்தாலும் கல்விநிலையங்கள் தோறும் ஆவணப் படத்தை திரையிடு வோம். தமிழக அரசு பிபிசி ஆவணப் படத்தை திரையிட தடை விதிப்பதை கைவிட வேண்டும். அரசே முன்னின்று திரையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.