tamilnadu

img

தில்லி அரசாங்கத் திருத்த அவசரச் சட்டமுன்வடிவு நிராகரிக்கப்படவேண்டும்

புதுதில்லி, ஜூலை 19- மக்களவையில் தில்லி யூனி யன் பிரதேச அரசாங்கத் திருத்த அவசரச் சட்டத்தை நிராகரித்திட, தீர்மானம் கொண்டுவரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நோட்டீஸ் அளித்துள் ளார். மக்களவை வியாழன் அன்று தொடங்குவதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஒரு நோட்டீஸ் அளித்திருக்கிறார். அதன்படி, “மக்களவை 2023 மே 19 அன்று குடியரசுத் தலைவரால் பிரகடனம் செய்  யப்பட்ட 2023ஆம் ஆண்டு தில்லி அரசாங்க (திருத்தச்)  அவசரச் சட்ட முன்வடிவை இந்த அவை நிராகரிக்கி றது” என்ற தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டி ருக்கிறார்.