tamilnadu

img

தொழில் வளர்ச்சி சூழலை உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்கிறது

கொச்சி, ஏப்.12- மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ளத்தக்க தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலையை உரு வாக்குவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். எர்ணா குளம் கோகுலம் பார்க் கன்வென்சன் சென்டரில் நடைபெற்ற ‘மிஷன் 1000’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் துவக்கிவைத்துப் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். முதலீடுகளை ஈர்ப்பதற்கும் புதிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் நிலையான தொழில் நட்புறவுச் சூழலை  உருவாக்க இயலும். கேரளம் தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலம் அல்ல என்ற தவறான பிரச்சாரம் நடை பெற்றது. மாநிலத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் இதன் பின்னால் நின்று செயல்பட்டார்கள். ஆனால் தொழில் முனைவோர்கள்  கேரளத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் முன்வந்தார்கள். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் தொழில் முனைவுகள் என்று கூறிய போது, இது நடக்குமா என்று சந்தேகப் பட்டவர்கள் உண்டு. ஆனால் 8 மாதங் களில் லட்சியம் நிறைவேற்றப்பட்டது. திட்டத்திற்குக் கிடைத்த பேராதர வால்தான் தற்போது இரண்டாவது கட்டம் துவங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள 1000 தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 4 ஆண்டுகளில் சராசரியாக 100 கோடி லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்களாக மாற்றும் திட்டம்தான் ‘மிஷன் 1000’ திட்டம். இது அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் கூறினார்.

மாநிலத்தில் சிறு-குறு-நடுத்தர தொழில்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பதற்கு சாப்ட்-வெயர் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். தொழில் முனைவோர் ஆண்டின் முதல் கட்டத் தில் 1.39,840 தொழில்கள் துவங்க  முடிந்தது. இதன் மூலம் 3,43,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தொழில் முனைவோரில் 45107 பேர்  பெண்கள் மற்றும் 14 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும் என்றும் பி.ராஜீவ் கூறி னார். நிகழ்ச்சியில் மிஷன் 1000 போர்ட்டல் மற்றும் யூ-ட்யூப் செல்ஃபி பாய்ண்ட் ஆகியவற்றை நிதித்துறை அமைச்சர் கே.என்.பாலகோபால் துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.