புதுதில்லி, ஜூலை 29- உறுப்பு தான விழிப்புணர்வுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மக்களவை உறுப்பி னர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள் விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித் துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது, பி.ஆர்.நடராஜன், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு உரிய நேரத்தில் மனித உறுப்புகள் கிடைக்காததன் காரணமாக இறப்பு கள் அதிகரித்துள்ளது அரசுக்கு தெரி யுமா? அதன் விபரங்கள் என்ன? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வசதிப் படுத்துவதற்காக, குறிப்பாக, உறுப்பு நன்கொடையாளர்கள் மற்றும் இந்த சிகிச்சைக்கு பொறுப்பான நிறுவனங்க ளின் மருத்துவ அதிகாரிகள் இவர்களி டையே விழிப்புணர்வை உருவாக்க, வலுவான வடிவமைப்புகளை உரு வாக்கும் முன்மொழிவுகள் ஏதேனும் அரசிடம் உள்ளதா? அதன் விபரங்கள் என்ன? உறுப்பு நன்கொடையாளர் களின் குடும்பத்திற்கான செலவுகளை எதிர்கொள்ள, அரசுக்கு ஏற்பட்ட செல வின விவரங்கள் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங் பாகல் அளித்த பதில் வருமாறு: சுகாதாரம் என்பது மாநிலப் பட்டி யலில் வரக்கூடியதாகும். இறந்தவர் களின் உறுப்பு தானத்தை அதிகப் படுத்துவதற்கும், இவ்வகை சிகிச் சைக்கான கட்டமைப்புகளை மேம் படுத்துவதற்கும், அந்தந்த மாநிலங்க ளில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற் றிற்கு மனித சக்தியை வழங்குவதற்கும், இவ்வகையில் ஏற்படும் இறப்புகளை கண்காணிப்பதற்கும் தேவையான நட வடிக்கைகளை எடுப்பது மாநில அரசு களின் முதன்மையான பொறுப்பாகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, உரிய நேரத்தில் மனித உறுப்புகள் கிடைக்கப்பெறாததன் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் மையத்தில் பரா மரிக்கப்படவில்லை.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (The National Organ and Tissue Transplant Organisation - NOTTO), மண்டல உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் (ROTTOs), மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு கள் (SOTTOs) ஆகியவை பொதுமக்க ளிடையே உறுப்பு தானம் தொடர்பு டைய தகவல்களை பரப்புகின்றன. www.natto.mohfw.gov.in என்ற ஒரு இணையதளம் மற்றும் 010800114770 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை கொண்ட, 24x7 வேலை செய்யும் ஒரு ‘கால் சென்டர்’ ஆகியவையும் செயல் பாட்டில் உள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யோடு தொடர்புடையவர்களான டாக் டர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள் ளிட்ட அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பயிற்சி அளிக்க, உறுப்பு தான தினக் கொண்டாட்டங்கள், கருத்த ரங்குகள், பட்டறைகள், விவாதங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், மாரத்தான், வாக்கத்தான் பங்களிப்பு, தெரு நாட கங்கள் முதலான பல எண்ணிக்கை யிலான நடவடிக்கைகள் நாடு முழு வதிலும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விஷயம் பற் றிய விழிப்புணர்வானது அச்சு ஊடகத் தில் விளம்பரம், ஒலி ஒளி காட்சி செய்தி கள், தூர்தர்ஷன் மற்றும் பிற தொலைக் காட்சி சேனல்களில் நிபுணர்களின் உரை கள் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
உறுப்பு தான விழிப்புணர்வை உரு வாக்க, மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஊடக பிரச்சார வகையில் உறுதிமொழி எடுத்தல் ஆகியவை, நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படு கிறது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பான ‘நாட்டோ’ (‘NATTO’), 22-07-2023 அன்று ஏற்பாடு செய்த உறுப்பு மற்றும் திசு தானம் பற்றிய தேசிய வெபினார், உறுப்பு தான மாதமான ஜூலை மாதத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது. நாடு முழுவதுமிலிருந்து இதில் பங்கு பெற்ற பங்கேற்பாளர்களிடமிருந்து பெரும் அளவிலான பதில் கருத்துக்களை இந்த வெபினார் சம்பாதித்தது. மனித உறுப்பு மற்றும் திசு மாற்று விதிகள் 2014இன் விதி 9இன் படி மூளைச்சாவு அடைந்ததாக அறி விக்கப்பட்டவரின் உடலை பராமரித் தல், உறுப்புகள் அல்லது திசுக்களை மீட்டெடுத்தல், அவைகளின் போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய நட வடிக்கைகளுக்கான செலவுகள் நன் கொடையாளரின் குடும்பத்தாரால் ஏற் கப்பட மாட்டாது. அந்தந்த மாநில அரசு கள் அல்லது யூனியன் பிரதேச நிர்வா கத்தால் முடிவு செய்யப்பட்டபடி, தானம் பெற்றவரோ அல்லது நிறுவ னமோ அல்லது அரசு அல்லது அரசல் லாத அமைப்போ அல்லது சமூகமோ செலவுகளை ஏற்கலாம். மேலும் தேசிய உறுப்பு மாற்று திட்ட வழிகாட்டுதல்கள் படி, இறந்த நன்கொடையாளரின் கண்ணியமான இறுதிச் சடங்கிற்கான செலவுகளை ஈடுகட்ட, ஒவ்வொரு நன்கொடையாளர் குடும்பத்துக்கும் ரூ.10000/- என்ற வகையில் நிதி ஆதரவானது, சம் பந்தப்பட்ட மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பினால் (SOTTO) வழங் கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பதிலளித் துள்ளார். (ந.நி.)