tamilnadu

img

காவல்துறை தடுப்பை மீறி போராட்டம்

திருவண்ணாமலை, மே 29- திருவண்ணாமலையை அடுத்த தேவனந்தல், புனல்காடு கிராமங்களின் அருகே அமைந்துள்ள மூலக்குன்று  மலையடிவாரத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம்  முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அப்பகுதி மக்கள், விவசாயி கள் மே 13 முதல் தொடர் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்  ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு  தெரிவித்துள்ளன. இந்த போராட்டத் தின் 17ஆவது நாளான திங்களன்று (மே 29) விவசாயிகள் சங்கத்தின் தலை வர் பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர்  பி.டில்லிபாபு ஆகியோர் தலை மையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வல மாக செல்ல முற்பட்டனர்.  ஊர்வலம் துவங்கிய பகுதிக்கு வந்த  காவல் துணை கண்காணிப்பாளர்கள் குணசேகரன், பழனி ஆகியோர் விவ சாயிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, நடை பயண தூரம் அதிகமாக உள்ளதாக வும், அண்ணா நுழைவு வாயில் அருகிலி ருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடை பயணம் செல்லலாம் என  தெரிவித்தனர். அதை விவசாயிகள்  சங்கத் தலைவர்கள் ஏற்றுக் கொண்ட னர்.

போலீஸ் அராஜகம்

இதையடுத்து, விவசாயிகளும், கிராம மக்களும் நடைபயணத்தை துவக் கியபோது, மேலும் ஒரு அடிகூட நகரவிடாமல் காவல்துறையினர் தடுத்தனர். அப்போது, விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் காவல்துறை யினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் எஸ். பலராமன் ஆகியோருக்கு கால் களில் சிறு காயம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடுப்புகளை தகர்த்தெறிந்து நடைபயணத்தை தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் அறிவியல் பூங்கா அருகே காவல் துறையினர் மீண்டும் வாகனங்களை தடுப்பாக அமைத்து தடுக்க முயன்ற னர். காவல்துறையினரின் கெடுபிடி களையும் மீறி ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர்.

ஆட்சியர் உறுதி

போராட்டக்குழு தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது தொடர்  பாக மாவட்ட அமைச்சரிடம் ஆலோ சித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், எஸ். பலராமன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம்.சிவக்குமார், மற்றும் கட்சி  நிர்வாகிகள் பலர் இந்த நடைபய ணத்தில் கலந்து கொண்டனர். ஜனநாயக ரீதியில் நடைபயணம் சென்றவர்கள் மீது காவல்துறை அரா ஜகமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தெரிவித்தார்.