tamilnadu

img

நாசகர சக்தி பாஜகவை வீழ்த்துவதே முக்கியம்

இ.கே.நாயனார் நகர் (கண்ணூர்), ஏப். 8- நாசகர சக்தி பாஜகவை வீழ்த்த மேலும் உத்வேகத்துடன் செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23  ஆவது அகில இந்திய மாநாடு முடிவு  செய்துள்ளதாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். கண்ணூரில் வெள்ளியன்று (ஏப்.8) செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  23 ஆவது அகில இந்திய மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் நகல்  தீர்மானத்தின் மீது கடந்த 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மா னத்தின் மீது அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளின் சார்பில் 9 பெண்கள் உட்பட 48 பேர் உரையாற்றினார்கள். அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

நடப்பு அரசியல் சூழ்நிலையில் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் கடமைகள், முன்னுரிமை அளிக்க  வேண்டிய விசயங்கள் குறித்து அவர்கள் தங்களது மாநிலத்தின் கருத்துக்களை தெரிவித்தனர். விவாதங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாகவும் விறுவிறுப்புடனும் அமைந்திருந்தன. அறிக்கையின் மீது மாநாட்டுக்கு முன்பு 4001 திருத்தங்கள் வந்தன. மாநாடு நடைபெறும் கடந்த 3 நாட்களாக  பிரதி நிதிகள் சார்பில் 319 திருத்தங்கள் அளிக்கப்பட்டன. இதில் பெரும் பாலான திருத்தங்கள் அரசியல் நகல்  தீர்மானத்தை மேலும் செழுமையாக்கு வது குறித்ததாக அமைந்திருந்தன.

அறிக்கை மீதான விவாதம் வெள்ளி யன்று முற்பகல் முடிவடைந்தது. மாநாட்டில் முன்வந்துள்ள கருத்துக் களை  அரசியல் தலைமைக்குழு பரி சீலித்தது. மாலையில் விவாதத்திற்கு பதிலளித்து பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி பேசினார். கட்சின் முன்பு  தற்போதுள்ள சவால்களை எதிர் கொள்ள மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் நகல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் காலத்தில் கட்சி மேலும் ஒற்றுமையுடனும் வலிமையுடனும் செயல்படுவதற்கான வழிகாட்டுதலை தெளிவாக மாநாடு தெரிவித்துள்ளது. விவாதத்தில் பங்கேற்ற பெண்கள் ஒன்றிய பாஜக அரசாங்கத்தால் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்ச னைகளை குறிப்பிட்டனர். பாஜக அரசு  கட்டவிழ்த்து விட்டுள்ள சமூக ஒடுக்கு முறைகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்க ளை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். நாட்டின் அரசமைப்பு சாசனத்தின் மீது பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற் பட்டுள்ள ஆபத்து, விடுதலைப்போராட் டம் மற்றும் எண்ணற்ற தியாகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு சாசனத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் பல பிரதிநிதி கள் தங்களது கவலையை மாநாட்டில் வெளிப்படுத்தினார்கள்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை புறந்தள்ளி மக்கள் மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகள் மேற்கொள்ளும் தாக்குதல் கள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கை கள் குறித்தும் சிறுபான்மை மக்கள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்கள் குறித்தும் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டு களில் நடைபெற்றுள்ள விவசாய இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங் கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் நடத்தியுள்ள பல்வேறு போராட்டங்கள் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டது. மாநாட்டில் முன்வந்த விவா தங்களின் அடிப்படையில் மாநாடு முடிந்த பின்னர் நாங்கள் மேலும் உத்வேகத்தோடு பாஜக அரசின் புதிய தாராளமய பொருளாதார கொள்கை களுக்கு எதிராகவும் இந்துத்துவா கார்ப்பரேட் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடுவோம்.

கட்சி செயல்பாடு குறித்த அறிக்கை தாக்கல்

அரசியல் நகல் தீர்மானத்தின்மீது விவாதமும் தொகுப்புரையும் முடிந்த பின்னர் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அரசியல் தலை மைக்குழு சார்பில் பிரகாஷ் காரத் தாக்கல் செய்தார். இவ்வாறு பிருந்தா காரத் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். காங்கிரஸ் கட்சி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “ஊடகங்களுக்கு இதுகுறித்து தொடர்ந்து குழப்பம் ஏன் ஏற்படுகிறது என தெரியவில்லை; பாஜக-ஆர்எஸ்எஸ் ஆபத்தை எதிர் கொள்வதுதான் தற்போது எங்களது கட்சியின் முன் உள்ள முக்கிய நோக்கம். இது எங்களது பணி மட்டு மல்ல, தேசத்தின் எதிர்காலம் குறித்து  அக்கறை கொண்டுள்ள அனைவரது கடமையும் ஆகும். நாட்டின் சமூக நல்லிணக்க கட்டமைப்பை சீர் குலைக்கும் நாசகர சக்தியாக பாஜக உள்ளது. அதை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கான பல்வேறு உத்திகள் கட்சியின் நகல் தீர்மானத்தில் ஏற்கனவே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மிக மோசமான அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட எங்களுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறிவுஜீவிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார் பிருந்தா காரத். பேட்டியின்போது கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன் உடனிருந்தார்.