மதுரை, ஜூன் 23- ஒன்றிய பாஜக அரசின் மெத்தனப் போக்கால்தான் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தாமதமாகி வருகிறது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையத் திற்கான கட்டுமானப்பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக் கிழமையன்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) கட்டுவதில் தாமதம் ஏற்படுவதற்கு ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கு தான் காரணம். ஜப்பான் சர்வதேச கூட்டு றவு முகமையிடமிருந்து (ஜெய்கா) பல திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் கடன்களை அரசாங்கம் பெற்று வருகிறது. சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி- மருத்துவ மனை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்டங்களுக்கு நிதி உதவி செய்யுமாறு ஜெய்காவிடம் மாநில அரசு கேட்டுள்ளது. இங்கெல் லாம் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு ஜெய்காவிடமிருந்தும் நிதியைப் பெறும் பொறுப்பை ஒன்றிய அரசு ஏற்றுள்ளது. அவர்கள் நிதியைப் பெற்றுத் தருவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரத மர் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதற்கான நிலத்தை ஒன்றிய அரசிடம் மாநில அரசு ஒப்படைத்து விட்டது . முதலமைச்சர் சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்தபோது கூட ஜெய்கா அதிகாரிகளைச் சந்தித்து எய்ம்ஸ்க்கு நிதியை விரைவில் விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். எதிர் வரும் மூன்று மாதங்களுக்குள் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து நிதி வந்து சேர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கி 2028-ஆம் ஆண்டுக்குள் கட்டடம் தயாராகி விடும். சென்னையில் தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவரை மருத்துவர்கள் குழு உன்னிப் பாகக் கண்காணித்து வருகின்றனர். திருமங்கலத்தில் தற்போது நீர்நிலையில் இயங்கி வரும் ஹோமி யோபதி கல்லூரி மாற்றப்படஉள்ளது. புதிய கட்டடம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ளது. ஐந்து ஏக்கர் நிலத்தை சுற்றி லும் வேலி அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளி யிடுவார். மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனை வளாகத்தில் ரூ.159.65 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் முடி வடையும். தமிழ்நாடு முதல்வர் அதை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அரசு மருத்துவமனை வளாகத் திற்குள் ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்புக்காக ரூ.20 கோடி செல வில் புதிய 100 படுக்கைகளுடன் கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணி 15 மாதங்களில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.