tamilnadu

img

ஒரு டிரில்லியனை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை: முதலமைச்சர்

சென்னை, அக்.5- ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் தனித் திறன் வாய்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைக் கப்பட்டுள்ள, இந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.5) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உரை யாற்றிய முதலமைச்சர்,“ உலகின்  மிக சிறந்த 500 நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஹிட்டாச்சி  நிறுவனம் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் சென்னையில் திறப்பது பெருமையாக உள்ளது”என்றார். தமிழ்நாட்டில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகி றோம். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சார் பூங்காக் களை அமைத்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன் மையங்கள் அதிகரித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட திட்டங்களை, விரிவாக்கங்கள் மேற்கொள்வது பெருமையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்  தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலர் அருண் ராய், ஹிட்டாச்சி எனர்ஜி  நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்    கிளாடியோ ஃபாச்சின்  மேலாண்மை இயக்குநர்  வேணு    உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.