குறுவை சாகுபடிக்கு கடன்தொகை வழங்கும் போதே பயிர்க் காப்பீடுக்கும் பிரீமியத் தொகை பிடித்தம் செய்வதோடு அரசே காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயி கள் தொடர்ந்துவலியுறுத்திவருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பள வில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 2 லட்சம் ஏக்கருக்கு குறையாமல் குறுவை சாகுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேநிலை தான் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் நிலைமையும். ஆனால் ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வாய்க்கால் நிரம்பி வயலில் பாய வழியின்றி தண்ணீர் விரயமாக கடலோடிக் கொண்டுள்ளது. இருந்தும் மோட்டார் பம்ப் உதவியோடு வயலில் தண்ணீர் இறைத்து வரப்பு கட்டுதல், சேறடித்தல், விதை தெளித்தல் ஆகிய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தும் கூட, வங்கிகளில் ஏக்கருக்கு ரூ.2ஆயிரம் மட்டுமே கடன் தருகின்றனர். அதிலும் பயிர் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்யப்படவில்லை. அதனால் குறுவைக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் பெற வழி யில்லை.
வங்கியில் பிரீமியம் பிடித்தால் தான் விவசாயி களுக்கு இழப்பீடு உத்தரவாதம் கிடைக்கும் என்று விவசாயிகள் புலம்புகின்றனர். அதோடு பயிர் காப்பீட்டுக்கு எந்த கம்பெனியும் இதுவரை டெண்டர் கோர முன்வரவில்லை. கடந்தாண்டிலும் தனியார் கம்பெனிகள் பின் வாங்கியதால் விவசாயி களுக்கு பயிர் இழப்பீடு கிடைக்கவில்லை. ஏற்கனவே தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வந்தது. அதில் விவசாயிகளி டமிருந்து ஒன்றிய, மாநில அரசுகள் 1.5 சதவீதம் தான் பிரீமியம் வாங்கின. இப்போது தனியார் கம்பெனியிடம் காப்பீடுத் திட்டம் மாற்றப்பட்டு ஏகப்பட்ட தொகை விரயமாகப் போய்க் கொண் டுள்ளது. தமிழக அரசிடமிருந்து ரூ.2ஆயிரம் கோடி இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வருடா வருடம் வீணாகப் போகிறது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் இருக்கும்போது அரசுக்கு நிதிச் சுமை ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் கம்பெனிகள் இழுபறி நிலையை கடைப்பிடித்துக் கொண்டுள்ளன. அத னால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பயிர் இழப்பீட்டுத் தொகையை அரசே வழங்குவதென சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றி அதை செயல்படுத்த வேண்டும். தனியார் கம்பெனியிடம் இனிமேலும் கெஞ்சி நிற்க தேவையில்லை. இந்தியாவின் உணவு உற்பத்தி, பொருளா தாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசே காப்பீட்டு திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும். இதுகுறித்து வேளாண் துறை யினரிடம் கேட்டபோது, காப்பீடு அறிவிப்பு விரை வில் வெளிவர வாய்ப்பு உள்ளது. கடனுதவி பெறும்போதும், தனியாகவும் விவசாயிகள் பிரீமியத் தொகையை கட்டலாம். அதற்கு கால அவகாசம் உள்ளது எனக் கூறுகிறார்கள். இதுஎந்தளவிற்கு சாத்தியம் என்று தெரிய வில்லை. எப்படி பார்த்தாலும் விவசாயிகளுடைய கவலையை கணக்கில் எடுத்துக் கொண்டு எதிர் வரும் காலங்களில் விவசாயத்திற்கான பிரீமியத் தொகையை அரசே கட்டுவது தான் உதவியாக இருக்கும். அதை உறுதியாக நிறைவேற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று பெரிதும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.