திருவாரூர், நவ. 5- தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் 15ஆவது இரண்டு நாள் மாநில பிரதிநிதித் துவப் பேரவை திருவாரூரில் தோழர்கள் கூடூர் நடராஜன், டெஸ்மா ராஜப்பா, வெ.பிச்சமுத்து, எஸ். ராஜகோபால், ஜி.நாகராஜன் நினைவரங்கில் சனிக்கிழமை (நவ. 5) எழுச்சியுடன் தொடங்கியது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சவுந்தரராஜன், சங்கக் கொடியை ஏற்றிவைத்து பேர வைக்கு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ெஜ.சேவியர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் பேரவையை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் வெ.செல் லையா வேலை அறிக்கையையும், பொருளாளர் இரா.பட்டாபிராமன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் ஆர்.சண்முக சுந்தரம் வாழ்த்திப் பேசினார். முன்னதாக வரவேற்புக் குழு தலைவர் வே.சோமசுந்தரம் வர வேற்றார். மாவட்டப் பொருளாளர் எம்.அய்யப்பன் நன்றி கூறினார்.
கருத்தரங்கம்
மாநில துணைத்தலைவர் சோ.பத்மா தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில், “சரித்திரத் தேர்ச்சி கொள்” என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதுகை பூபாளம் கலை குழுவினரின் நையாண்டி தர்பார், ஆரூர் பொன்.மகாலிங்கத்தின் காவிரி கலைக்குழு இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. முன்னதாக திருவாரூர் அருகே உள்ள விளமல் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்ற பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.