சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அயோத்தி தாச பண்டிதர் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.