tamilnadu

img

மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் காவல்துறை, அரசு நிர்வாகம் கெடுபிடி

சென்னை,ஜூலை 23- கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலம் தனியார் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சந்தேகத்திற் குரிய முறையில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் உடல், 10 நாட்க ளுக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயின்று வந்த மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் கடந்த ஜூலை 13 அன்று  உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மூன்று நாட்களாகியும் பள்ளியின் நிர்வாகிகள் ஒருவரும் இந்த பிரச்சனையில் தலையிடவில்லை. அரசு அதிகாரிகளும் கண்டுக் கொள்ளவில்லை. இதனையடுத்து, கலவரமாக மாறி வன்முறை வெடித்தது.  இந்த விவகாரங்கள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மாணவியின் உடலை அவரின் பெற்றோர் பெற்றுக் கொள்ளக் கோரி  காவல் துறை சார்பில் உயர் நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் உடலை பெற ஒப்புக்கொண்டார். உடல் ஒப்படைப்பு இதனையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் சனிக்கிழமையன்று (ஜூலை 23)  கள்ளக்குறிச்சி தலைமை அரசு மருத்துவமனையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளிநபர்களுக்கு தடை!

பின்னர் மாணவியின் சொந்த கிராமமான கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூருக்கு பலத்த பாதுகாப்புடன் உடல் எடுத்துச் செல்லப் பட்டது. வேப்பூர் அருகே செல்லும் பொழுது மாணவியின் உடலை எடுத்து  சென்ற ஆம்புலன்ஸ் முன்னால் சென்ற  வாகனத்தில் மோதியது. எனினும் பலத்த சேதம் ஏதும் இல்லை. இதனை  தொடர்ந்து சொந்த ஊருக்கு கொண்டு  செல்லப்பட்ட மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடல் நல்லடக் கம் செய்யப்பட்டது.

அதிரடிப்படை குவிப்பு

மாணவியின் சடலம் கொண்டு செல்லும் வழி நெடுகிலும் அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். சொந்த ஊரில் 800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதிச் சடங்கில், மாணவி குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்த வர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.