பெங்களூரு, மே 10 - இந்தியாவிலேயே தங்களின் மிகப்பெரிய தொழிற்சாலையை பெங்களூரு வில் அமைக்க உள்ளதாகவும், இதற்காக சர்வதேச விமான நிலையத்தின் அருகே சுமார் 300 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாக வும் பாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஒருநாள் முன்னதாக அவசர அவசர மாக இந்த அறிவிப்பை பாக்ஸ்கான் வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி ஒப்பந்த நிறுவனமான பாக்ஸ்கான், தனது உற்பத்தியை சீனா வில் இருந்து படிப்படியாக இந்தியா வுக்கு மாற்றி வருகிறது. இந்த பின்னணி யிலேயே, பெங்களூருவில் தங்களின் மிகப் பெரிய தொழிற்சாலையை அமைக்க உள்ள தாகவும் பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த அறிவிப்பை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒருநாள் முன்ன தாக மே 9 அன்று, பாக்ஸ்கான் நிறுவனம் திடீரென வெளியிட்டிருப்பது முக்கியத்து வம் பெற்றுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின், புதிய தொழிற்சாலை பெங்களூருவில் அமைய உள்ளது குறித்து, சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசும், பாக்ஸ்கான் நிறுவனமும் ஒருசேர அறிவித்திருந்தன. அதைத்தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநிலத்தின் உயர்மட்ட கிளியரன்ஸ் கமிட்டி யானது, சுமார் 8000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் கிரீன்பீல்ட் தொழிற்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர் பான ஆய்வுப் பணிகளை கடந்த மார்ச் 22 அன்று துவங்கியது. தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருந்த நிலையில், இந்த திட்டத்திற்கு ஏப்ரல் மாத இறுதியில் வேகவேகமாக ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இந்நிலையில்தான், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில், இந்தியாவி லேயே மிகப்பெரிய தொழிற்சாலையை பாக்ஸ்கான் அமைக்க உள்ளதாகவும். அதற்கான நிலத்தை வாங்கிவிட்டதாகவும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒருநாள் முன்னதாக அவசர அவசரமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக லண்டன் பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை யன்று அறிக்கை வெளியிட்ட பாக்ஸ்கான், பெங்களூரு சர்வதேச விமானநிலையத்தி ற்கு அருகில் சுமார் 1.2 மில்லியன் சதுர மீட்டர் (சுமார் 298 ஏக்கர்) அளவிலான நிலத்தை வாங்கியுள்ளதாகவும், இதற்காக பாக்ஸ்கா னின் தாய் நிறுவனமான ‘ஹோன் ஹாய் டெக்னாலஜி’ (Hon Hai Technology) சுமார் 37 மில்லியன் டாலர் (300 கோடி ரூபாய்) அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது, கர்நாடக தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது போல, நிலம் வாங்கியது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, வாக்குப்பதிவு நாளான மே 10 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக திடீரென பாக்ஸ்கான் வெளி யிட்டுள்ளது. இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 13-க்குப் பின் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் வரலாம் என்ற அச்சத்திலேயே, பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வேகவேமாக ஒப்புதல் வழங்கப்பட்டு, நிலமும் வாங்கப் பட்டு இருப்பதாக பேச்சுக்கள்எழுந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்திற்குத் தேவையான மொத்த எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் சுமார் 30 சதவிகிதத்தை இந்தியாவில் தயாரித்து வழங்கும் பாக்ஸ்கான், இந்திய தேவைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டுச் சந்தைக்கு தேவையான பொருட்களையும் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.