tamilnadu

img

ரூ.34,615 கோடி டிஎச்எப்எல் ஊழல்; நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி

புதுதில்லி, ஜுன் 23- வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து ரூ.34,615 கோடி மோசடி செய்ததாக தேவன் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஎச்எப்எல்) இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி  என கூறப்படுகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்ட ஹவுசிங் கம்பெனியின் சிஎம்டி கபில்  வாதவன், இயக்குநரான தீரஜ் வாதவன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது. முன்னதாக, எஸ்பிஐ தலை மையிலான கூட்டமைப்பிலிருந்து ஏபிஜி கப்பல் கட்டும் இயக்குநர்கள் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ விசாரணை நடத்தியது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து டிஎச்எப்எல் ரூ.42,871 கோடி கடன்  2010-18 ஆம் ஆண்டில்  வாங்கி யுள்ளது. தணிக்கையாளர்களின் முறைகேடு கள் குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி யூனியன் வங்கி, விசாரணை நடத்தக் கோரி சிபிஐக்கு கடிதம் அளித்தது. யெஸ் வங்கி நிறுவனர் ரணாகபூருடன் சேர்ந்து கடன் மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கபில் வாதவன், தீரஜ் வாதவன் ஆகிய இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.  மோடி ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிக் கடன் மோசடி தொடர் கதையாகி வருகிறது. விஜய் மல்லை யா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பெரும் மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறினர் என்பது நினைவு கூரத் தக்கது.