மதுரையில், எளிமையான குடும்பத் தில் பிறந்த லீலாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு சமூகப் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டார். இடதுசாரி கருத்தியலைத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டதால், ஏழை, எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளில் தன்னை முழு மையாக அர்ப்பணித்தார். மதுரையின் வில்லாபுரம் மாமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லீலாவதி. அந்தப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை அடிப்படை தேவைகள் பற்றி, யாருக்கும் அஞ்சாமல் உரக்கக் குரல் கொடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த சமூக விரோதிகள், அவரை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். 1997 ஏப்ரல் 23-ஆம் தேதி, காலை ஏழு மணி. வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வில்லாபுரத்தில் லீலாவதி வந்து கொண்டிருந்தார். அப்போது, பொதுக் கழிப்பறையில் ஒளிந்திருந்த சமூகவிரோதிகள் பாய்ந்து வந்தனர்.
அரிவாளால் லீலாவதி யைக் கொடூரமாக வெட்டினர். தடுக்க முயன்ற அவரின் கையில் கடுமையான வெட்டு விழுந்து விரல்கள் துண்டா கின. இறுதியில், மக்களுக்காகவே துடித்துக்கொண்டிருந்த லீலாவதியின் உயிர் துடித்து அடங்கியது. மதுரை மக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர். அந்த மக்கள் அலை கூட்டத்தின் மத்தியில் லீலாவதியின் உடல் இறுதி ஊர்வலமாகச் சென்றது. அதன்பின் இரண்டு, மூன்று மாதங்கள் வரைகூட மக்கள் அந்த இடத்தில் நீரூற்றி, பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். அது, மக்களின் மனதில் லீலாவதி நீங்கா இடம்பெற்றதற்கான அடையாளம். அவரின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கான குடிநீர், ரேசன் பிரச்சனைகள் தீர்ந்தன. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்ததில்லை. உள்ளாட்சி அமைப்பில் சிறிய பொறுப்பில் இருந்தவர். ஆனால், தனது உறுதிமிக்க செயல்பாட்டின் வீச்சை இந்தச் சமூகத்துக்குக் காட்டியவர். அரசியலில் ஈடுபட வரும் பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரி தோழர் லீலாவதி.
இன்று (ஏப்.23) தோழர் லீலாவதி நினைவு நாள்