tamilnadu

img

‘காட்’ வந்த போதே கல்வி மீது தாக்குதல் துவங்கியது

மதுரை, ஜன.7- காட் ஒப்பந்தம் வந்த போதே கல்வித்  துறை மீதான தாக்குதல் தொடங்கி விட்டது. அன்றைக்கு காட் ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் இடதுசாரிகள் என்று மூட்டா முன்னாள் தலைவர் ஜேம்ஸ் வில்லியம் கூறினார். மூட்டா (மதுரை காமராசர், மனோன்  மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரி களில் பணிபுரியும் பேராசிரியர்களின் சங்  கமாகும்). 1972-ஆம் ஆண்டு தொடங்கப்  பட்ட இந்த அமைப்பு பொன்விழாவை கொண்டாடுகிறது. அதனொரு பகுதி யாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்  கள் மதுரையில் “உயர் கல்வியைக் காப்  போம்” என்ற கருப்பொருளைத் தாங்கி 25 ஆவது மாநாடு நடைபெறுகிறது.

சனிக்கிழமையன்று பொன்விழா மாநாட்டின் வரலாற்றுக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர்,  “கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கை களுக்காக அன்றைய கல்வியமைச்சர் அர்ஜூன் சிங்கிடம் நிர்வாகிகளை அழைத்  துச் சென்றவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி. கல்வித்துறை மீதான தாக்கு தல் காட் ஒப்பந்தம் வந்தபோதே தொடங் கியது. அன்றைக்கு காட் ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் இடதுசாரிகள். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தை இரு நூறு ஆண்டு களுக்கு முன்னரே தலைவர்கள் எழுப்பி னர். இன்றைக்கு “உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டனர்”. அதன் தாக்கம்  இந்தியாவிலும் உள்ளது. உலகத் தொழி லாளர்கள் அமைப்பிலும் மூட்டா இயக்  கம் பணியாற்றியுள்ளது. இன்றைய சூழ லில் மூட்டா அமைப்பு “அரசியல் போராட்  டத்தையும்; சமூகப் போராட்டத்தையும்” நடத்துவதன் மூலமே நாம் நமது போராட்டங்களில் வெற்றி பெற முடியும் என்றார்.

கருத்தரங்கில் பொதுப்பள்ளிகளுக் கான மாநில மேடையின் அமைப்பா ளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசு கையில், தேசியக்கல்விக்கொள்கை 2020-ஐ ஒரு கல்வி ஆவணம் என்று நம்பி விட்டால் ஏமாந்து போவீர்கள். இந்தியக் கோட்பாட்டை தகர்ப்பது தான் தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்  செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  கூறினார். யெச்சூரி கூறியதைப் போல்  கல்வித்துறையை சிதைக்கும் வேலை யைத் தான் பாஜக செய்கிறது. இதை  மூட்டா முறியடிக்க வேண்டும். மூட்டா ஒரு பரந்து பட்ட சங்கமாக செயல்பட வேண்  டும். மூட்டா-வை “ Mass Trade Organisation” என்று அழைக்கும் அள விற்கு உங்களது நடவடிக்கைகள் இருக்க  வேண்டும். பல மொழி, பல இனங்கள்,  பல்வேறு கலாச் சாரங்கள் கொண்ட இந்திய தேசத்தை சமஸ்கிருத தேச மாக்க பாஜக முயற்சிக்கிறது. மூட்டாவில் அங்கம் வகிக்கும் பேராசி ரியர்கள் தங்களது பணி நேரம் போக எஞ்சியுள்ள நேரத்தை, சாலையோர வியாபாரிகள், மீன் வியாபாரிகள், காய் கறி வியாபாரிகளை சந்தித்து தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துக்கூறுங்கள். அவர்களது பிள்ளை களிடமும் கூறுங்கள். மாணவர்களும்-கல்வியாளர்களும் இணைந்து போராடி னால் தான் தேசியக் கல்விக்கொள்கை யை முறியடிக்க முடியும்; மட்டுமல்ல  நாட்டையும் பாதுகாக்க முடியுமென்றார். மாநாட்டில் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன், பி.ஸ்டீபன் ஜான்,  ஜி.ராஜூ, ஏ.வில்சன் பாஸ்கர், உமயவள்ளி, பி.கே. பெரியசாமி ராஜா, பி.சிவஞானம். வி.  கோமதிநாயகம், எஸ். ரமேஷ் ராஜ், இ. பி.  ஞானேஸ்வரன்,  ஆர். ஹெய்ஸ் தாசன்,   ஜி.ஐசக் அருள்தாஸ், நாகராஜன், சி. ஜேம்ஸ், தலைவர் ஐசக் சோபனாராஜ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  கே.எம். தர்ம லிங்கம், புதிய ஆசிரியன் மாத இதழின்  ஆசிரியர் மூட்டா கே.ராஜூ, பெ.விஜய குமார், திண்டுக்கல் மனோகரன், மனோ கரன் (மதுரை), சோ.மோகனா உட்பட தமி ழகம் முழுவதுமிருந்து தேர்வு செய்யப்  பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற னர்.