சென்னை,டிச.3- அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக் கான தேர்தலில் போட்டியிட விருப்பமனு கேட்க வந்த அதிமுக உறுப்பினர் தொண்டர் களால் அடித்து,விரட்டியடிக்கப்பட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக் கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடை பெற உள்ளது. இதையடுத்து சென்னை ராயப் பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை யகத்தில் டிசம்பர் 3 அன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பா ளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அதிமுக தொண்டர்களாலே அடித்து விரட்டியடிக்கப் பட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி க்கு போட்டியிட அ.திமு.க. நிர்வாகிகள் தனக்கு விருப்ப மனு தர மறுப்பதாக சென்னை யை சேர்ந்த பிரசாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது அதிமுக தொண்டர் கள் அவரை அங்கிருந்து ஓட ஓட விரட்டி யடித்தனர். இது குறித்து அதிமுக நிர்வாகி கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓம பொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்பட வில்லை என்று கூறி மழுப்பியுள்ளனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓமபொடி பிரசாத் சிங் புகார் அளித்துள்ளார்.
சென்னை,டிச.3- அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக் கான தேர்தலில் போட்டியிட விருப்பமனு கேட்க வந்த அதிமுக உறுப்பினர் தொண்டர் களால் அடித்து,விரட்டியடிக்கப்பட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக் கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடை பெற உள்ளது. இதையடுத்து சென்னை ராயப் பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை யகத்தில் டிசம்பர் 3 அன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பா ளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர் ஓமபொடி பிரசாத் சிங் அதிமுக தொண்டர்களாலே அடித்து விரட்டியடிக்கப் பட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி க்கு போட்டியிட அ.திமு.க. நிர்வாகிகள் தனக்கு விருப்ப மனு தர மறுப்பதாக சென்னை யை சேர்ந்த பிரசாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது அதிமுக தொண்டர் கள் அவரை அங்கிருந்து ஓட ஓட விரட்டி யடித்தனர். இது குறித்து அதிமுக நிர்வாகி கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓம பொடி பிரசாத்துக்கு விருப்பமனு தரப்பட வில்லை என்று கூறி மழுப்பியுள்ளனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓமபொடி பிரசாத் சிங் புகார் அளித்துள்ளார்.