சென்னை, ஜூன் 19- ஆயுதத் தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தொழிற்பயிற்சியாளர்களுக்கு (அப்ரண்டிஸ்)ஏன் வேலை வழங்கக் கூடாது என அகில இந்திய பாது காப்பு துறை சங்கத்தின் பொதுச் செயலாளர் சி. ஸ்ரீகுமார் கேள்வி எழுப் பியுள்ளார். இந்திய கடலோர காவல் படை, பாதுகாப்புத்துறை சிவில் பணியிடங்கள் மற்றும் புதிய 7 ஆர்டனன்ஸ் ஃபேக்டரி கார்ப்பரே ஷன்கள் உட்பட 16 டிபிஎஸ்யு- க்களில் அக்னிவீரர்களுக்கு வேலையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பாது காப்பு அமைச்சகம் எடுத்த முடிவு குறித்து அவர் கூறுகையில், ஒன்றிய அரசால் பாதிக்கப்பட்ட இளைய தலைமுறையினர் அவநம்பிக்கை யுடன் உள்ளனர். மக்கள் அரசாங்க சேவைகளின் மீது நிறைய மதிப்பு வைத்துள்ளார்கள். பல பாதுகாப்பு வல்லுநர்கள் ஏற்கனவே இந்த அக்னிபாத் திட்டத்தை நிராகரித் துள்ளனர். ஏனெனில் இது இந்திய ஆயுதப்படைகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களில் கடுமையான பாதகமான விளைவு களை ஏற்படுத்தும். பீரங்கித் துப்பாக்கிகள், சிறிய ஆயு தங்கள், ராக்கெட்டுகள், வெடிமருந் துகள், டாங்கிகள், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப் டர்கள் போன்ற போர் உபகரணங் களைக் கையாளவும் பராமரிக்கவும் சிறப்புத் திறன், பயிற்சி மற்றும் அனுப வம் தேவை. தேர்வு செய்யப்படாத 75 விழுக்காடு அக்னிவீரர்கள் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் மற்றொரு பிரச்சனையாக இருக்கும். மேலும் நியாயமற்ற மற்றும் ஆரோ க்கியமற்ற போட்டிகள் உருவாகும்.
முதலில் வேலை எங்கே?
ஆயுதத் தொழிற்சாலைகளின் கார்ப்பரேட்மயமாக்கலுக்குப் பிறகு, 41 ஆயுதத் தொழிற்சாலைகளில் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறாது என்று பாதுகாப்பு நாடா ளுமன்ற நிலைக்குழு முன் அரசாங் கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆயுதத் தொழிற்சாலைகளில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 பணியி டங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த பாதுகாப்புத்துறை தொழிற்சா லைகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப மாட்டோம் என்ற அரசின் முடிவை முதலில் திரும்ப பெற வேண்டும். ரயில்வேயில் ஏற்கனவே 92,000 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. வேலையில்லாத இளைஞர்கள் மீது அரசு மிகவும் அக்கறையுடன் இருந்தால், தொழிற்பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக வேலை வாய்ப் பிற்கு காத்துக் கொண்டிருப்ப வர்களை கொண்டு அனைத்து காலியி டங்களையும் நிரப்ப வேண்டும்.
தொழிற்பயிற்சி சட்டம் 1961இன் படி தொழில் பயிற்சியாளர்களுக்கு 60 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தோம் ஆர்டனன்ஸ் தொழிற்சாலைகள், டி.ஆர்.டி.ஓ. இ.எம்.இ. பணிமனைகள் மற்றும் ரயில்வே உற்பத்தி பிரிவுகள் உட்பட ரயில்வேயில் பயிற்சி பெற்ற தொழிற்பயிற்சியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான அறி விப்பை அரசு வெளியிடட்டும். கார்ப்பரேட்மயமாக்கலுக்குப் பிறகு, ஆயுதத் தொழிற்சாலைகளில் இறந்த ஊழியர்களின் வாரிசு களுக்கான கருணை பணி நியமனங் களைக் கூட அரசு நிறுத்தி வைத்து ள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தில் கோவிட் 19 பாதிக்கப்பட்டு இறந்த வர்களின் வாரிசுகளுக்கும் கூட வேலை வழங்கப்படவில்லை. 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாது காப்பு சிவில் பதவிகளில் ஆட்சேர்ப்பு இல்லை. அதன் முடிவுகளின் தாக்கம் குறித்து அரசு சுயபரிசோதனை செய்ய வேண்டும். வேலையில்லாத இளைஞர்கள் மீது அரசு அக்கறையுடன் இருந்தால் ஒன்றிய அரசின் ஆயுதத் தொழிற் சாலைகள் உட்பட 10 லட்சம் காலிப் பணியிடங்களையும், பொதுத் துறையில் 5 லட்சம் பணியிடங் களையும் நிரப்புவதற்கான அறி விப்பை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும் நிறுவனமய மாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற வேண்டும். ஆயுதத் தொழிற்சா லைகளின் முக்கியத்துவத்தை அரசு புரிந்து கொண்டு, அதை மீண்டும் அரசு நிறுவனமாக கொண்டு வந்து, ஆர்டர்களை வழங்க வேண்டும் என்றார்.