tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு 6வது கட்டமாக ஆக.3 ல் நடக்கிறது

சென்னை, ஜூலை 30- போக்குவரத்துக் கழக ஊழியர்க ளின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6 ஆவது கட்ட பேச்சுவார்த்தை ஆக.3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதி யாக கடந்த 11 ஆம் தேதி போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தலைமையில் சென்னை  குரோம்பேட்டையில் பேச்சுவா ர்த்தை நடைபெற்றது. அதில் தொழிற் சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையி லும் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடு வதற்கான நோட்டீஸை போக்கு வரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு தொழிற் சங்கத்தினர் வழங்கினர். ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து 67 தொழிற்சங்கங்க ளுக்கு போக்குவரத்து துறை அனுப் பிய சுற்றறிக்கையில், “சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் ஆக.3-ம் தேதி காலை  11 மணிக்கு 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்கும் வகையில், தொழிற்சங்கத் துக்கு ஒரு பிரதிநிதி மட்டும் ஏற்கெ னவே வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.