tamilnadu

img

தரங்கம்பாடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் வாலிபர் சங்கம் 250 கி.மீ சைக்கிள் பிரச்சாரப் பேரணி

மயிலாடுதுறை, டிச.9 - மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ஓடிய ரயிலை மீண்டும் இயக்கி காரைக் கால் வரை நீட்டிக்க வேண்டுமென வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாபெரும் சைக்கிள் பிரச்சார பயணத்தை மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் நடத்தி வருகின்றனர். 1926 ஆம் ஆண்டு தரங்கம்பாடியி லிருந்து வியாபாரப் பொருட்களை தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில், ஆங்கிலேய அரசால் துவங்கப்பட்ட ரயில் சேவை விவசாயிகள், மீனவர்கள், நடுத்தர, ஏழை மக்களுக்கும், ஏழை மாணவர்கள் வெளியூர் சென்று கல்வி கற்கவும் உதவியது. இந்த ரயில் 60 ஆண்டுகள் போக்கு வரத்து சேவை செய்த நிலையில், ரயில் பாதையை அகலப்படுத்துவதாக அறிவித்து, 1986 இல் இந்திய ரயில்வே துறை திடீரென நிறுத்தியது. வெறும் போக்கு வரத்து, சரக்கு சேவையோடு நின்று விடாமல் கடலோர மீனவ கிராமங்களுக்கு நல்ல குடிநீரை திருக்கடையூர் கிணற்றிலி ருந்து எடுத்துச் சென்ற, ‘தாகத்திற்கு நல்ல  தண்ணீர்’ தந்த இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப் படுத்த உதவிய ரயில் சேவையை மீண்டும் இயக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள், கோரிக்கை முறையிடல்கள் நடந்தன.

 இச்சூழலில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் மயிலாடுதுறை - தரங் கம்பாடி இடையே ரயில்  சேவையை மீண்டும் இயக்கிடக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 250 கி.மீ தூரம் சென்று பிரச்சாரம் செய்யும் சைக்கிள் பய ணத்தை வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம் பகுதியில் துவக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்களில் ஒருவருமான பி.சீனி வாசன், குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்து உரையாற்றினர். இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர் கள் மாவீரன் பகத்சிங், புரட்சியாளர் சேகு வேரா படங்கள் பொறித்த வெண்ணிற ஆடையணிந்து, சென்னை மாற்று ஊடக மைய பறை இசையோடு, கோரிக்கை களை முழங்கி பங்கேற்றனர்.

வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்று வரும் பிரச்சார பேரணியில், மாவட்டச் செயலா ளர் அறிவழகன், மயிலாடுதுறை, குத்தா லம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்க ளின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டுள் ளனர். பிரச்சார பயணத்திற்கு குத்தாலம் பேருந்து நிலையத்தில், குத்தாலம் ஒன்றி யக் குழு உறுப்பினர் ஆர்.ரஞ்சித் தலைமை யில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் சி.விஜயகாந்த் வாழ்த்தி பேசினார். சோழம் பேட்டையில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜி.ரவி, மயிலாடுதுறை ஜங்ஷனில் முன்னாள் நகரச் செயலாளர் டி.துரைக்கண்ணு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  புதிய பேருந்து நிலையத்தில் ரத்த தான கழக முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.விஜய், கிட்டப்பா அங்காடியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளார் ஜி.ஸ்டாலின், வைத்தீஸ்வரன் கோயிலில் முன்னாள் வட்டச் செயலாளர் கே.அசோ கன், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் இளங்கோவன், பழைய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் செல்லப்பன், கொள்ளி டத்தில் விவசாய சங்க ஒன்றியப் பொருளா ளர் எல்.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

இரவு ஓய்வுக்கு பின் ஆச்சாள்புரத்தில் 2-ஆவது நாள் சைக்கிள் பேரணி துவக்க நிகழ்ச்சிக்கு புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவரும், வாலிபர் சங்க மாவட்டக் குழு  உறுப்பினருமான நேதாஜி தலைமை வகித்தார். கொள்ளிடம் ஒன்றிய பெருந் தலைவர் ஜெயபிரகாஷ் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.  நல்லூர், ஆலாலசுந்தரம் பகுதியில் முன்னாள் வட்டச் செயலாளர் கேசவன், மாதாணத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ப.மாரியப்பன், கருவியில் விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் வழக்கறி ஞர்  ஞானபிரகாசம், ஆக்கூர் முக்கூட்டில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.எம்.சரவணன், ஆக்கூரில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கே.பி.மார்க்ஸ் ஆகியோர் பிரச்சார பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர்.  வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பய ணத்திற்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும்   பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணி வித்தும், பட்டாசுகள் வெடித்தும்  வரவேற்ப ளித்தனர்.