tamilnadu

தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணம் உடலைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜன.22- தஞ்சாவூரில் உள்ள தூய இரு தய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த அரியலூரைச் சேர்ந்த17 வயது மாணவி தற் கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மாணவியின் உடலை உடற்கூராய்வுக்குப் பின் அவரது பெற்றோர் பெற்றுக் கொள்ளவில்லை.தொடர்ந்து, தனது மகளின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி, விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதி மன்றம், இறந்த மாணவியின் உடலை இரண்டாவது முறை உடற் கூராய்வு செய்யத் தேவையில்லை. உடலை மனுதாரர் பெற்றுக் கொண்டு, பாரம்பரிய முறை யில் அடக்கம் செய்ய வேண்டும். சிறுமியின் பெற்றோர் மாஜிஸ்தி ரேட் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் ரவளி பிரியா கந்தபுனேனி, இந்த வாரத் தொடக்கத்தில், முதல் புகாரிலும் சிறுமியின் மரணம் குறித்த தகவலிலும் மத மாற்ற முயற்சி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். சிறுமி இறந்து ஒரு நாள் கழித்து ஜனவரி 20-ஆம் தேதி “அந்த வீடியோ பதிவு” காவல் துறையிடம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பாஜகவின் மதமோதல் அரசியல்

இதற்கிடையில் மாணவியின் மரணத்தை அரசியலாக்கி பள்ளி யில் மதமாற்றம் நடைபெறுவ தாகக் கூறி மதமோதலை உரு வாக்கும் நோக்கில் இந்துமகா சபை, இந்து மக்கள் கட்சி, பார திய ஜனதா கட்சியினர் தஞ்சாவூ ரில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை யை உருவாக்கினர்.

இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மரணம் குறித்து முழு மையாக விசாரணை நடத்த வேண்டும். மாணவியின் மரணம்  மூலம் மதமோதலை உருவாக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென இந்திய மாணவர் சங் கத்தின் தஞ்சாவூர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.