tamilnadu

தென்காசி முத்து உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஆக.27- தென்காசி மாவட்டம் வாகைக் குளத்தில் விசாரணைக்கு அழைத் துச் செல்லப்பட்ட விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபி சிஐடிக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம், வாகைக் குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்துவை அணைக்கரை முத்து வைச் சிவசைலம் வனச்சரக அலுவ லகத்திற்கு விசாரணைக்காக வனத் துறை அழைத்துச் சென்றனர். விசா ரணையின் போது அணைக்கரை முத்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி பாலம்மாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்,” விசாரணைக்காக அழைத்துச் சென்ற எனது கணவர் வனத்துறையினர் தாக்குதால் உயிரி ழந்துள்ளார். கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். தொடர்புடைய வனத் துறையினர் மீது கொலை வழக்கு  பதிவு செய்யவேண்டும். வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்றவேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப் பன் முன்பாக வியாழனன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது அர சுத்தரப்பில், தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப் பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் ஹென்றி, “பாதிக் கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள் எதும் கிடைக்கவில்லை என;j தெரிவிக்கப் பட்டது. அதற்கு அரசுத்தரப்பில், அர சின் நிவாரணம் வழங்க ஆட்சியர் காசோலையில் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. வாரி பிரச்சனை காரணமாகவே நிவார ணம் வழங்குவதில் தாமதம் எனத் தெரிவித்தார்.  தொடர்ந்து மனுதாரர் தரப்பில், வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதி டப்பட்டது. அதற்கு நீதிபதி, இது குறித்து தமிழக அரசுத்தரப்பில் பதி லளிக்க உத்தரவிட்டு வழக்கை செப் டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத் தார்.